NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா நெசவாளர் நெய்த 18 லட்சம் மதிப்பிலான தங்க சேலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா நெசவாளர் நெய்த 18 லட்சம் மதிப்பிலான தங்க சேலை
    நெசவாளர் நெய்த 18 லட்சம் மதிப்பிலான தங்க சேலை

    தெலுங்கானா நெசவாளர் நெய்த 18 லட்சம் மதிப்பிலான தங்க சேலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 30, 2024
    01:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானாவின் சிர்சில்லாவைச் சேர்ந்த நெசவுக் கலைஞரான நள்ள விஜய் குமார், முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன புடவையை நெய்துள்ளார்.

    ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக இந்த தனித்துவமான படைப்பை செய்யச்சொல்லி கூறியுள்ளார்.

    ஆறு மாதங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட ஆர்டருக்கு, பல நுணுக்கமான வேலைப்பாடும், கவனமும் தேவை.

    சிர்சில்லா தெலுங்கானாவில் உள்ள நகரமாகும், இது திறமையான கைத்தறி நெசவாளர்களுக்கு புகழ்பெற்றது மற்றும் நள்ள விஜய் அவர்களில் ஒருவர்.

    கைவினைஞர் விஜய் குமார், தங்கத்தை நெசவு செய்ய நேர்த்தியான இழைகளாக மாற்றுவதற்கு சிறப்பு சிகிச்சை முறையும், துல்லியமும் தேவை என்றும், இதற்கு கணிசமான நேரம் எடுக்கும் என்றும் கூறுகிறார்.

    தங்க நூல் தயாரிக்கப்பட்டதும், சேலை 10 முதல் 12 நாட்களில் நெய்யப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தங்கம் தங்கம்.. செல்ல தங்கம் தங்கம்.. 10 நாளில் உருவாக்கப்பட்ட தங்க புடவை... விலை எவ்வளவு தெரியுமா?#Telangana #Gold #GoldSaree #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/IdG2xr73cd

    — News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 30, 2024

    புடவை

    18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க புடவை 

    சேலை 49 அங்குல அகலமும் ஐந்தரை மீட்டர் நீளமும் கொண்டது. இது 800 முதல் 900 கிராம் வரை எடை கொண்டது மற்றும் தோராயமாக 200 கிராம் தூய தங்கம் உள்ளது.

    இந்த நேர்த்தியான படைப்பை உருவாக்குவதற்கான மொத்த செலவு 18 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    தனது கைவினையில் திருப்தி அடைந்த விஜய் குமார், "இதுபோன்ற தனித்துவமான சேலையை நெசவு செய்தது பெருமையாக உள்ளது. இந்த திட்டத்தை முடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், இந்தக் கலையின் மீதான எனது ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் கனவையும் நிறைவேற்றுகிறது" என்றார்.

    ஆர்டர் கொடுத்த தொழிலதிபரின் மகளின் திருமண நாளான அக்டோபர் 17ம் தேதி, அவரின் குடும்பத்தாருக்கு இந்த தங்க சேலை பரிசாக வழங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    தெலுங்கானா

    ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்கள் யார்? தேர்தல்
    இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது மல்லிகார்ஜுன் கார்கே
    தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு இந்தியா
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ் தேர்தல் முடிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025