தெலங்கானா பிஆர்எஸ் MLA லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி
தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செகந்திராபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, இன்று காலை ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 36. காரை 130 கி.மீ வேகத்தில் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. லாஸ்யா நந்திதா, இன்று அதிகாலை 5 மணியளவில், தனது உதவியாளர் அசோக்குடன் சதாசிவ பேட்டா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, செகந்திராபாத் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில், அதிவேகமாக ஒரு லாரியை முந்தியுள்ளனர். அப்போது நிலை தடுமாறி, அந்த லாரி மீதே மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே லாஸ்யா பலியானார். காரை ஒட்டி சென்ற அவரின் உதவியாளர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.