NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம் 
    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 18, 2023
    06:03 pm
    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம் 
    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம்

    தமிழ்நாடு மாநிலத்தில் பண்டையக்காலத்தில் மன்னர்கள் எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கோட்டைகளை கட்டினர். அதற்குள் எதிரிகள் வராமல் இருக்க கோட்டையினை சுற்றி அகழிகளை அமைத்து அதில் முதலைகள், பாம்புகள் போன்றவற்றை விட்டு வைப்பர். அதன்படி தஞ்சை பெரிய கோவில் சுற்றிலும் இதுபோன்ற அகழிகளை அமைத்துள்ளார்கள். இந்த அகழிகளுக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு, பொதுமக்கள் அதனை கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் தண்ணீர் அகழியில் நிரம்பியிருக்கும் பொழுது அந்த பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயரும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இங்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருவதால், கடந்த 2 ஆண்டுகளாக ஓரளவுக்கே தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதனால் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்து அகழி புதர் மண்டி காட்சியளிக்கிறது.

    2/2

    அகழியை சுத்தம் செய்யவேண்டும் என்பது மக்களின் கோரிக்கை 

    சிலர் இப்பகுதிகளில் குப்பைகளை கொட்டவும் செய்கிறார்கள். தொடர்ந்து அகழி கரையோரங்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் இந்த இடம் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது என்று கூறப்படுகிறது. அகழியில் உள்ள நீர் சீக்கிரம் வறண்டு போகிறது. இதனால் அகழிகளில் குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் நிறைந்துள்ளதால் துர்நாற்றம் வீசப்படுகிறது. இதன் காரணமாக அவ்வழி செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கினை மூடியப்படி கடந்து செல்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகழியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தஞ்சை பெரிய கோவில்
    தமிழ்நாடு

    தஞ்சை பெரிய கோவில்

    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம் தமிழ்நாடு
    தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தமிழ்நாடு
    தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை தமிழ்நாடு
    தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள்  திருவிழா

    தமிழ்நாடு

    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  கோவில்கள்
    சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி  உதயநிதி ஸ்டாலின்
    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!  மத்திய அரசு
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023