LOADING...
குடையோடு வெளியே செல்லுங்கள்! இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

குடையோடு வெளியே செல்லுங்கள்! இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
11:02 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை வளிமண்டல அலை காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜனவரி 25) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் நிலை

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தொடர் மழையினால் சாலைகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், அலுவலகம் மற்றும் முக்கியப் பணிகளுக்குச் செல்வோரின் போக்குவரத்து பாதிக்கப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 29°C வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22°C வரையும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்

வெப்பநிலை மற்றும் மீனவர்களுக்கான அறிவுறுத்தல்

மேகமூட்டம் காரணமாக இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2°C முதல் 3°C வரை அதிகமாக இருக்கக்கூடும். இதனால் குளிர்ந்த காலநிலைக்குப் பதில் சற்று வெப்பமான சூழல் நிலவலாம். வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement