தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது. முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு வந்த ஆளுநர் அர்லேகரை பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சட்டப்பேரவை முன்னவர் செங்கோட்டையன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், அவருக்கு காவல்துறை மரியாதையும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முறையாக தொடங்கியது. வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் அர்லேகர், ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் எனும் அண்ணாவின் உரையை சுட்டிக் காட்டி பேசினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் | #TNAssembly | #CMVijay | #RajendraArlekar | #Governor | #Assembly2026 | #PolimerNews pic.twitter.com/oV3ilvv34A
— Polimer News (@polimernews) June 18, 2026