
ஜூலை 1 முதல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
ஜூலை 1 முதல் மின்சார கட்டணத்தை 3.16% அதிகரிக்கும் புதிய கட்டண உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நெருக்கடியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) செலவுகளை மீட்டெடுக்க உதவும் வகையில் 2026-27 வரை வருடாந்திர உயர்வுகளை அனுமதித்த முந்தைய உத்தரவைத் தொடர்ந்து இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2022 உத்தரவின்படி, ஒவ்வொரு ஜூலை மாதமும் 6% அல்லது ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு, எது குறைவாக இருக்கிறதோ அந்த விகிதத்தில் கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது.; புதிய
நுகர்வோர் விலைக்குறியீடு
ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக்குறியீடு
நடப்பு ஆண்டில், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலைக்குறியீடு 3.16% ஆக இருந்தது, இது அங்கீகரிக்கப்பட்ட அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இதனால், வரும் ஜூலை 1 முதல் பல்வேறு பிரிவுகளில் கட்டணங்கள் ஒரு யூனிட்டுக்கு 15 முதல் 37 பைசா வரை உயரும் எனத் தெரிகிறது. திட்டமிடப்பட்ட அதிகரிப்பு இருந்தபோதிலும், வீட்டு நுகர்வோர் எந்த கூடுதல் சுமையையும் எதிர்கொள்ளக் கூடாது என கடந்த மே மாதமே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து TANGEDCO-வுக்கு மானியங்கள் மூலம் வீட்டு நுகர்வோருக்கான கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்கும் என்பதை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
தொழில்துறை
தொழில்துறைக்கு பாதிப்பு
இந்த புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டால், வீட்டு நுகர்வோருக்கான செலவை அரசு ஏற்றாலும், தொழில்துறை பாதிப்பை எதிர்கொள்ளும் என தொழில்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், மின்கட்டண உயர்வு அமலாகும்பட்சத்தில் வீட்டு நுகர்வோருக்கான கூடுதல் செலவை அரசே ஏற்கும் என அறிவித்ததுபோல, தொழில்துறையினருக்கான கூடுதல் செலவையும் அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் பொதுக் குழுக்களும் அவ்வப்போது ஏற்படும் உயர்வுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தாலும், TANGEDCO-வின் அதிகரித்து வரும் இழப்புகளை நிர்வகிக்கவும், மாநிலம் முழுவதும் நிலையான மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த திருத்தம் அவசியம் என்று அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.