NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை

    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை

    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெருமாள் பட்டியை சேர்ந்த குருசாமி, ஈஸ்வரி தம்பதியின் மகன் பிரவீன். இவரும் திருச்சி மனப்பாறையை சேர்ந்த தமிழ்செல்வியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

    அமெரிக்காவில் வசித்து வந்த இவர்களுக்கு மிலன் என்னும் அழகான குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 2ம்தேதி பிரவீன்குமார், தமிழ்செல்வி தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.

    அதன்பின்னர் 10 நாட்கள் கழித்து அவர்கள் இருவரது உடல்களும் சொந்தஊருக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ஆனால் குழந்தை அந்நாட்டு உரிமைபெற்ற காரணத்தினால் இந்தியாவிற்கு கொண்டுவரச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அதனால் குழந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    உரிய அனுமதிபெற்று குழந்தையை அழைத்து செல்லுங்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதையடுத்து, தமிழ்செல்வியின் தங்கை கிளம்பி அமெரிக்கா சென்றுள்ளார்.

    தொடரும் சிக்கல்கள்

    தமிழ் அமைப்புகள் உதவ முன்வரவேண்டும் என வேண்டுகோள்

    அங்குசென்ற பின்னர்தான் குழந்தையை அமெரிக்காவில் வசிக்கும் வடமாநில தம்பதியினர் தற்காலிகமாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் என்னும் அதிர்ச்சிச்செய்தி அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

    இதனைதொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்ட நிலையில் அந்த வடமாநில தம்பதியினர் குழந்தை தமிழ்நாட்டுக்கு, தனது தாத்தா பாட்டி ஊருக்கு சென்றால் அங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று வாதிட்டனர்.

    இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மிலனின் தாத்தாப்பாட்டி ஊருக்கு நேரில்சென்று ஒரு குழு ஆய்வுசெய்து அறிக்கை அளித்துள்ளது.

    அந்த அறிக்கையினை அமெரிக்க குழந்தைப்பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்த நிலையிலும் வடமாநில தம்பதியினர் தொடர்ந்து சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    ஒரு வருடமாக நீடிக்கும் இந்த சிக்கலைத்தீர்க்க அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் முன்வரவேண்டும் என அந்த குழந்தையின் குடும்பம் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    மதுரை

    சமீபத்திய

    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்

    அமெரிக்கா

    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தான்
    அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம் இந்தியா
    சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா இந்தியா
    இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை இந்தியா

    இந்தியா

    தடைசெய்யப்பட்ட நோட்டுகளை வெளிநாட்டு மக்கள் மாற்றமுடியாது! PIB தகவல் மத்திய அரசு
    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு பாஜக
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் கோவா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது மகாராஷ்டிரா

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025