NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 
    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 
    இந்தியா

    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 

    எழுதியவர் Nivetha P
    April 12, 2023 | 06:41 pm 0 நிமிட வாசிப்பு
    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 
    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

    ரங்கநாத் மிஸ்ரா ஆணைப்படி, பட்டியலின கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி ஒன்றினை எழுப்பி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது இன்று(ஏப்ரல்.,12) நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையில் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் பட்டியலின மக்கள் கால காலமாக தீண்டாமைக்கு உள்ளானவர்கள். எனவே, அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மதம் ஒரு தடையாக இருக்க கூடாது என்று கூறப்பட்டது.

    விசாரணையினை ஒத்தி வைத்த நீதிபதி அமர்வு 

    மேலும், இது குறித்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையினை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய மத்திய அரசு, தற்போதுள்ள சூழ்நிலையில் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் பல்வேறு ஆணையங்களின் முடிவுகள் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள நிலையில் ஏன் அதனை செயல்படுத்த கூடாது என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மத மாற்றத்திற்கு பிறகும் சமூக புறக்கணிப்புகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதனையடுத்து அவர்கள், அரசியல் சாசன அம்சங்களை பரிசீலிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும் கூறி விசாரணையினை ஒத்தி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய அரசு
    உச்ச நீதிமன்றம்

    மத்திய அரசு

    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா
    நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு பிரதமர் மோடி
    சமையல் எரிவாயுவின் விலை குறையும்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா
    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் இந்தியா
    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ராகுல் காந்தி
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023