NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 
    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 

    எழுதியவர் Nivetha P
    Apr 12, 2023
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    ரங்கநாத் மிஸ்ரா ஆணைப்படி, பட்டியலின கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி ஒன்றினை எழுப்பி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கானது இன்று(ஏப்ரல்.,12) நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையில் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் பட்டியலின மக்கள் கால காலமாக தீண்டாமைக்கு உள்ளானவர்கள்.

    எனவே, அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மதம் ஒரு தடையாக இருக்க கூடாது என்று கூறப்பட்டது.

    நீதிமன்றம்

    விசாரணையினை ஒத்தி வைத்த நீதிபதி அமர்வு 

    மேலும், இது குறித்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையினை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய மத்திய அரசு,

    தற்போதுள்ள சூழ்நிலையில் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் பல்வேறு ஆணையங்களின் முடிவுகள் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள நிலையில் ஏன் அதனை செயல்படுத்த கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து, மத மாற்றத்திற்கு பிறகும் சமூக புறக்கணிப்புகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதனையடுத்து அவர்கள், அரசியல் சாசன அம்சங்களை பரிசீலிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும் கூறி விசாரணையினை ஒத்தி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    மத்திய அரசு

    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை இந்தியா
    தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.5,769 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு தமிழ்நாடு
    இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி உயர்வு! இந்தியா
    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025