NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு
    சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு

    தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 03, 2025
    04:28 pm

    செய்தி முன்னோட்டம்

    நீதித்துறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், உச்ச நீதிமன்றத்தின் 30 நீதிபதிகள், நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் சொத்துக்களின் விவரங்களை பகிரங்கமாக வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர்.

    ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற்ற முழு நீதிமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இது எதிர்கால நீதிபதிகளுக்கும் பொருந்தும்.

    முன்னதாக சொத்து அறிவிப்புகள் இந்திய தலைமை நீதிபதிக்கு (CJI) மட்டுமே கட்டாயமாக இருந்தன. ஆனால் பொதுவில் வெளியிடுவதற்கு விருப்பத்தேர்வாக இருந்த முந்தைய நடைமுறையிலிருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

    இருப்பினும், அதிகாரப்பூர்வ தீர்மானம் இன்னும் பதிவேற்றப்படவில்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | தங்கள் சொத்து விவரங்களை பொது வெளியில் பகிர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு! #SunNews | #SupremeCourt | #Judges | #AssetDeclaration pic.twitter.com/XWZS3kqab4

    — Sun News (@sunnewstamil) April 3, 2025

    காரணம்

    எதற்காக இந்த திடீர் மாற்றம்?

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்துக்குப் பிறகு எரிந்த பணத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குப் பிறகு, நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்தது.

    அதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1997ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக்களை தலைமை நீதிபதியிடம் அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.

    இருப்பினும், 2009ஆம் ஆண்டு தீர்ப்பு நீதிமன்றத்தின் வலைத்தளத்தில் இந்த அறிவிப்புகளை தானாக முன்வந்து வெளியிட அனுமதித்திருந்தாலும், அனைத்து நீதிபதிகளும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

    இந்த சமீபத்திய தீர்மானத்தின் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக சொத்துக்களை வெளியிடுவதும், அவற்றை பொதுவில் அணுகக்கூடியதாக மாற்ற முடிவு செய்துள்ளதும், இது பொறுப்புக்கூறலுக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உச்ச நீதிமன்றம்

    ஈஷா யோகா மையத்தில் சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார்: வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் ஈஷா யோகா
    ஓடிடி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை கண்காணிக்க ஆணையம்; மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் ஓடிடி
    நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு நீட் தேர்வு
    நீதித்துறை சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக முடிவெடுப்பது அல்ல: தலைமை நீதிபதி சந்திரசூட் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025