NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
    இந்தியா

    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2023, 03:21 pm 1 நிமிட வாசிப்பு
    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
    இது க்ரூட் ஃபண்டிங் தளமான கெட்டோ மூலம் பணம் திரட்டி மோசடி செய்தது தொடர்பான வழக்காகும்.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கை எதிர்த்து பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று(பிப் 7) தள்ளுபடி செய்தது. இது கோவிட்-19 மற்றும் பிற நிவாரணங்களை வழங்குவதற்காக அய்யூப், க்ரூட் ஃபண்டிங் தளமான கெட்டோ மூலம் பணம் திரட்டி மோசடி செய்தது தொடர்பான வழக்காகும். ராணா அய்யூப் பணமோசடி செய்ததாக முதலில் அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து காசியாபாத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்ற மனுவின் மூலம் அய்யூப், காசியாபாத் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கேள்விக்குட்படுத்தி இருந்தார். இந்த வழக்கின் விசாரணையை அமலாக்க இயக்குநரகத்தின்(ED) டெல்லி பிரிவு மட்டுமே மேற்கொண்டதாகவும், பணம் நவிமும்பையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அய்யூப்பின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    பணமோசடியின் 6 செயல்முறைகள்

    நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அய்யூப்பின் வாதத்தை நிராகரித்து, "PMLAவின் 3வது பிரிவின் கீழ், ஆறு செயல்பாடுகள் அல்லது செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டால், அது பணமோசடி என்று கருதப்படும்." என்று கூறியுள்ளது. மறைத்தல், உடைமை, கையகப்படுத்தல், பயன்படுத்துதல், கறைபடியாத சொத்தாக முன்னிறுத்துதல், கறைபடியாத சொத்து என்று கூறுதல் ஆகியவை அந்த ஆறு செயல்முறைகளாகும். "வங்கிக் கணக்கு அமைந்துள்ள நவி மும்பை, குற்றத்தின் வருமானம் சென்றடையும் இடமாகும். ஆறு நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை நடந்ததா என்ற கேள்வி ஆதாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியம்" என்பதால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    உச்ச நீதிமன்றம்

    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் மத்திய அரசு
    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை மத்திய அரசு
    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து இந்தியா
    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023