NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
    இது க்ரூட் ஃபண்டிங் தளமான கெட்டோ மூலம் பணம் திரட்டி மோசடி செய்தது தொடர்பான வழக்காகும்.

    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2023
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கை எதிர்த்து பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று(பிப் 7) தள்ளுபடி செய்தது.

    இது கோவிட்-19 மற்றும் பிற நிவாரணங்களை வழங்குவதற்காக அய்யூப், க்ரூட் ஃபண்டிங் தளமான கெட்டோ மூலம் பணம் திரட்டி மோசடி செய்தது தொடர்பான வழக்காகும்.

    ராணா அய்யூப் பணமோசடி செய்ததாக முதலில் அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து காசியாபாத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    உச்சநீதிமன்ற மனுவின் மூலம் அய்யூப், காசியாபாத் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கேள்விக்குட்படுத்தி இருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணையை அமலாக்க இயக்குநரகத்தின்(ED) டெல்லி பிரிவு மட்டுமே மேற்கொண்டதாகவும், பணம் நவிமும்பையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அய்யூப்பின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    உச்சநீதிமன்றம்

    பணமோசடியின் 6 செயல்முறைகள்

    நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அய்யூப்பின் வாதத்தை நிராகரித்து, "PMLAவின் 3வது பிரிவின் கீழ், ஆறு செயல்பாடுகள் அல்லது செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டால், அது பணமோசடி என்று கருதப்படும்." என்று கூறியுள்ளது.

    மறைத்தல், உடைமை, கையகப்படுத்தல், பயன்படுத்துதல், கறைபடியாத சொத்தாக முன்னிறுத்துதல், கறைபடியாத சொத்து என்று கூறுதல் ஆகியவை அந்த ஆறு செயல்முறைகளாகும்.

    "வங்கிக் கணக்கு அமைந்துள்ள நவி மும்பை, குற்றத்தின் வருமானம் சென்றடையும் இடமாகும். ஆறு நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை நடந்ததா என்ற கேள்வி ஆதாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியம்" என்பதால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு மக்களவை
    பீகார் - தேர்வறையில் 500 மாணவிகளை கண்டு மயக்கமடைந்த மாணவன் மாநிலங்கள்
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு தமிழக அரசு
    கேரளாவில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்! அறிமுக சலுகை என்ன? 5ஜி தொழில்நுட்பம்

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025