NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு
    சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு

    சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு

    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை பறக்கும் ரயில் வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்கும் மெட்ரோலைட் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆய்வுக்கான நிதியை திரட்டுவதற்கான ஒப்பந்த ஏலத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் நேற்று(பிப்.,6) முன்வைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் 40-50 சதவிகித செலவு மெட்ரோலைட் திட்டத்திற்கு ஆகும். மெட்ரோ ரயில் வளாகங்கள் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்டங்களை இணைத்தல், இது 5 முதல் 6 கி.மீ., தொலைவை கொண்டிருக்கும் என சித்திக் தகவல் அளித்துள்ளார்.

    மெட்ரோலைட் திட்டம்

    இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என அதிகாரி தகவல்

    மேலும் இதுகுறித்து சித்திக் கூறுகையில், இந்திய ரயில்வே தொடர்பிலிருந்து மெட்ரோலைட் திட்டம் சற்று வித்தியாசமானது.

    இது முந்தையகாலத்தில் இருந்த ட்ராமின் மேம்படுத்தப்பட்ட அம்சமாகவோ அல்லது தற்போதைய மெட்ரோ ரயிலில் உள்ள பெட்டிகளில் உள்ள வசதிகள் சற்றுகுறைந்த அம்சமாக இருக்கக்கூடும்.

    இது தரையில் இயங்கும் வசதியுடன் தனித்துவமான தண்டவாளங்களில் சாலையிலிருந்து வேலி அல்லது சுவரால் பிரிக்கப்பட்டு தனிபாதையில் இயக்கப்படும்.

    இதுக்கான நிதிஆதாரம் இன்னும் ஓரிரு நாட்களில் உறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தின்கீழ், மெட்ரோ மூன்றாம் கட்ட பணிகள் ஒன்று சாதாரண மெட்ரோ ரயில் திட்டமாகவோ அல்லது மெட்ரோலைட்டாகவோ இருக்கலாம்.

    இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என்று இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரியான சியூஎம்டிஏ அதிகாரி ஐ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தமிழ்நாடு
    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தமிழ்நாடு
    சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை தமிழ்நாடு
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் மு.க ஸ்டாலின்

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025