NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது
    இந்தியா

    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது

    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது
    எழுதியவர் Sindhuja SM
    Jan 25, 2023, 06:43 pm 0 நிமிட வாசிப்பு
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது
    இந்த ஆவணப்படம் கேரளாவில் திரையிடப்படும் என்று காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சிகள் அறிவித்துள்ளன

    பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை இன்று(ஜன 25) மாலை திரையிடுவதாக இருந்த இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளன்னர். இதனால் டெல்லியின் புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு, ஃபேஸ்புக்கில் திரையிட இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரிகள் வளாகத்தில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத கூட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தனர். இந்நிலையில், நீலநிற கவசங்கள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளுடன் பல்கலைக்கழக வாயிலுக்கு வேனில் வந்த காவல்துறையினர் இந்த மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

    பல்கலைக்கழகங்களில் தொடரும் ஆவணப்பட திரையிடல்

    2002 கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படத்தை இந்திய அரசாங்கம் தடைசெய்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்களிடம் இந்த ஆவணப்படத்தின் இணைப்பை அகற்றுமாறு கேட்டு கொண்டதன் மூலம் இந்த ஆவணப்படத்தின் பரவலை இந்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையை அப்பட்டமான "சென்சார்ஷிப்"(தணிக்கை) என்று எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. நேற்று(ஜன 24) மாலை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் நடத்திய இதேபோன்ற திரையிடல் சம்பவத்தை அடுத்து, பல்கலைக்கழகத்தில் இணையம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி இந்த ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதே போன்ற ஒரு சம்பவம் ஹைதெராபாத் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    நரேந்திர மோடி
    மோடி
    பாஜக

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    நரேந்திர மோடி

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை இந்தியா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா

    மோடி

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா
    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி இந்தியா

    பாஜக

    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு இந்தியா
    தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர் தமிழ்நாடு
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023