Page Loader
டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு
நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு

எழுதியவர் Sindhuja SM
Oct 03, 2023
02:59 pm

செய்தி முன்னோட்டம்

அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் நிலநடுக்கங்களைத் அடுத்து, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இன்று(அக் 3) மதியம் 2:51 மணியளவில் உணரப்பட்டது. நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி நேபாளத்தில் 5 கிமீ ஆழத்தில் இருந்ததாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின்(NCR) பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. உத்தரபிரதேசத்தின் லக்னோ, ஹப்பூர் மற்றும் அம்ரோஹா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் ட்விட்டர் பதிவு