சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள உதவும் மிகமுக்கியமான போக்குவரத்து சேவையானது சென்னை புறநகர்-மின்சார ரயில் சேவை. நாள் ஒன்றுக்கு இந்த மின்சார ரயில்களின் சேவைகளை ஆயிரக்கணக்கான மக்கள் உபயோகித்து வருகிறார்கள் என்று தெரிகிறது. அதன்படி, தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை கடற்கரை-தாம்பரம், வேளச்சேரி, செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், சென்ட்ரல்-அரக்கோணம்,சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இதில் ஏசி.,பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 2-3 ஏசிப்பெட்டிகள் வரை இணைக்கவுள்ளதோடு, இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த 6 மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.