Loading...
பிளாஸ்டிக்கில் இட்லி, ஜிலேபியில் ரசாயனம்: கர்நாடக ரயில் நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை
தெற்கு தென்மேற்கு ரயில்வே 14 நாள் சிறப்பு உணவு பாதுகாப்பு முகாம் மற்றும் தீவிர ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது

பிளாஸ்டிக்கில் இட்லி, ஜிலேபியில் ரசாயனம்: கர்நாடக ரயில் நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 21, 2026
05:19 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலைய உணவகங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய சோதனையில் கெட்டுப்போன உணவுகள், ஆபத்தான ரசாயன நிறமிகள் மற்றும் சுகாதாரமற்ற உணவுத் தயாரிப்பு முறைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தென்மேற்கு ரயில்வே 14 நாள் சிறப்பு உணவு பாதுகாப்பு முகாம் மற்றும் தீவிர ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. கே.ஆர்.புரம், மைசூர், ஹாவேரி உள்ளிட்ட 36 ரயில் நிலையங்களில் உள்ள 112 உணவகங்களில் FSDA அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பல்வேறு அதிர்ச்சிகரமான முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

சோதனை

உணவு பாதுகாப்புத் துறையின் சோதனை

சோதனையில், உணவகங்களில் விற்கப்பட்ட ஜிலேபியில் அனுமதிக்கப்படாத மஞ்சள் நிறமியும், கோவா பேடாவில் இளஞ்சிவப்பு நிறமியும் பயன்படுத்தப்பட்டது.

ஹாவேரியில் காலாவதியான நந்தினி தயிர், தொட்லா பால் பாக்கெட்டுகள் மற்றும் பூஞ்சை பிடித்த காய்கறிகள் கண்டறியப்பட்டன.

மைசூர் ரயில் நிலைய உணவகத்தில் இட்லி தட்டுகளில் பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்தி இட்லி அவிக்கப்பட்டது மற்றும் செய்தித்தாள்களில் வடை மற்றும் சமோசாக்கள் பொரித்து வைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

நடவடிக்கை

தெற்கு தென்மேற்கு ரயில்வேயின் நடவடிக்கை

இச்சம்பவத்தைத் தொடர்ந்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள தெற்கு தென்மேற்கு ரயில்வே, பெங்களூரு, மைசூர் மற்றும் ஹூப்ளி ஆகிய மூன்று கோட்டங்களில் உள்ள 428 உணவகங்கள், பேஸ் கிச்சன்கள் மற்றும் ரயில்களில் உள்ள பேண்ட்ரி கார்களில் 14 நாட்கள் சிறப்பு ஆய்வுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறும் உணவக உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புதல், அபராதம் விதித்தல் மற்றும் தீவிர குற்றங்களுக்கு ஒப்பந்தங்களை ரத்து செய்தல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT