NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது.

    இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநில அரசுகள் வனப்பகுதிகளில் உள்ள காட்டுயானைகள் கணக்கெடுக்கப்படும் பணியினை மேற்கொள்வது வழக்கம்.

    அதன்படி, இந்தாண்டு தனி தனியாக கணக்கெடுக்காமல், 4 மாநிலங்களையும் சேர்த்து தென்னிந்திய அளவிலான காட்டு யானைகளின் கணக்கெடுப்பானது இன்று(மே.,17)காலை துவங்கியது.

    இந்த கணக்கெடுப்பு பணியானது வரும் 19ம்தேதி வரை 3 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கோவை, நீலகிரி வனக்கோட்டங்களில் 7 வனசரகக்கங்களில் 42 இடங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கணக்கெடுப்புப்பணியில் வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், இளங்கலை வனவியல் மாணவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    யானை 

     தகவல்கள் அனைத்தும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் 

    இந்த யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடத்தப்படும்.

    முதல் நாளில் நேரடியாக சென்று யானைகளை கணக்கெடுத்தல், இரண்டாவது நாள் யானையின் சாணத்தை வைத்தும், மூன்றாவது நாள் நீர்நிலை பகுதிகளில் கணக்கெடுப்பு பணி என பணிகள் வகைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

    மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை, நீலகிரி வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறும்.

    யானைகளின் சாணம், கால்தடம், நீர்நிலைகளுக்கு அவைகள் வந்து செல்வது, யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பது ஆகியனவை மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுப்பு நடக்கும்.

    இதில் சேகரித்த தகவல்கள் அனைத்தும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாநில அரசு
    மாநிலங்கள்
    கர்நாடகா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்  திருவிழா
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  என்ஐஏ
    ப்ளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த நந்தினி தமிழக முதல்வருடன் சந்திப்பு  மு.க ஸ்டாலின்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு

    கர்நாடகா

    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள் இந்தியா
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்  பாஜக
    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  காங்கிரஸ்
    கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு  அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025