NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்
    தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்

    தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2023
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசா மாநிலம், கியாஜ்ஹர் மாவட்டத்தில் சரசபதி கிராமத்தில் வசிப்பவர் சாரதா.

    70 வயதாகும் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகனான கருணா வீட்டில் சாரதா வசித்து வந்த நிலையில், சமீபத்தில் கருணா உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளார்.

    இதனிடையே, இவரது இளைய மகன் சஸ்துருகன் சாரதா வசிக்கும் அதே கிராமத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

    அவ்வாறு சரசபதி கிராமத்தில் வசிக்கும் சஸ்துருகனுக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் அவர் தனது தோட்டத்தில் தற்போது காலிபிளவர் பயிரிட்டுள்ளார் என்றும் தெரிகிறது.

    இதற்கிடையே சாரதா நேற்று(டிச.,24)சமையல் செய்ய தனது இளைய மகன் தோட்டத்தில் இருந்து ஒரு காலிபிளவரை பறித்துள்ளார்.

    தாக்குதல் 

     வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை துவங்கியுள்ளது 

    இதுகுறித்து அறிந்த சஸ்துருகன் தனது தாயார் மீது கடும் ஆத்திரம் கொண்டுள்ளான்.

    அந்த ஆத்திரத்தில் தனது தாயாரை கடுமையாக தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.

    எனினும், ஆத்திரம் அடங்காத சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை தங்கள் வீட்டின் அருகேயுள்ள மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளான்.

    அதேசமயம் தனது மாமியாரை காப்பாற்ற முயற்சித்த தனது மனைவியையும் அவன் தாக்கியதோடு, 'யாரேனும் தடுக்க வந்தால் அவர்களையும் தாங்குவேன்' என்று மிரட்டல் விடுத்துள்ளான்.

    இறுதியில், ஒருவழியாக ஊர் மக்கள் ஒன்றுக்கூடி சாரதாவையும், சஸ்துருகனின் மனைவியையும் மீட்டுள்ளனர்.

    தனது மகனால் கொடூரமாக தாக்கப்பட்ட சாரதா தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில்,

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    காவல்துறை
    காவல்துறை
    மருத்துவமனை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    காவல்துறை

    எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம் எம்பிபிஎஸ்
    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  அமெரிக்கா
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு  பீகார்
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் ஆந்திரா

    காவல்துறை

    பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் பிலிப்பைன்ஸ்
    பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் குண்டுவெடிப்பு
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்
    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை  கைது

    மருத்துவமனை

    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் காசா
    பிறந்து 4 நாட்களே ஆன சிசுவின்  உடல் உறுப்புகள் தானம் குழந்தைகள்
    'லியோ' படத்தின் சிறப்பு திரையிடல் - பில்ரோத் மருத்துவமனைக்கு நன்றிகளை தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025