NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம் 

    ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார்.

    மேலும் ஒரு மேஜர் ரேங்க் அதிகாரி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

    இந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார்.

    துப்பாக்கிச் சண்டை இன்னும் நடந்து வருவதால், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்த வீரர்கள், நடவடிக்கை நடக்கும் தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியப் படைகளுக்கு எதிராக பாகிஸ்தான் எல்லை நடவடிக்கைக் குழு(BAT) நடத்திய தாக்குதலை இந்திய ராணுவத் துருப்புகள் முறியடித்துள்ளன.

    இந்தியா 

    குப்வாராவின் லோலாப் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு 

    தாக்குதலில் ஈடுபட்ட BAT குழுவில் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணிபுரியும் அவர்களின் எஸ்எஸ்ஜி கமாண்டோக்கள் உட்பட வழக்கமான பாகிஸ்தான் ராணுவத் துருப்புகள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    முன்னதாக ஜூலை 24 அன்று, குப்வாராவின் லோலாப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

    அந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டார்.

    ஆதாரங்களின்படி, சுமார் 40 முதல் 50 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குழு ஜம்மு மற்றும் காஷ்மீரின் மலைப்பாங்கான மாவட்டங்களின் மேல் பகுதிகளில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அவர்களைப் பிடிக்க அந்த பகுதிகளில் பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்
    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல் 2025
    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்

    ஜம்மு காஷ்மீர்

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு  தேர்தல்
    சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரின் குல்மார்க்கில் கல்லி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல்  சச்சின் டெண்டுல்கர்
    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025