Page Loader
ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல்
ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல்

ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல்

எழுதியவர் Nivetha P
Feb 09, 2023
03:52 pm

செய்தி முன்னோட்டம்

ராமேஸ்வரம்-இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல்வழி மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின்பேரில், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஓர் நாட்டு படகினை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர், அப்பொழுது அந்த நாட்டு படகில் இருந்த மூன்று பேர் மர்மமான மூட்டை ஒன்றினை கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த படகை பிடித்த அதிகாரிகள் அதில் இருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். அந்த மூன்று நபரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், கடலில் எரிந்தது தங்க கட்டிகள் என்பதையும் அவர்கள் கூறினர்.

12 கிலோ எடை

கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.7.5 கோடி என தகவல்

இந்நிலையில் கடலில் வீசப்பட்ட தங்கம் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு, பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட கடத்தல் தங்கத்தை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளார்கள். மீட்கப்பட்ட தங்கத்தின் எடை 12 கிலோ என்றும், இந்த கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.7.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த தங்கம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இதன் பின்னணி என்ன என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக நடந்த இந்த தீவிர தேடுதல் பணியில் சிலிண்டர்களை பொருத்தி கொண்டு ஆழ்கடலில் மூழ்கி தேடும் நபர்களை கொண்டு தேடுதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.