NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்

    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    08:31 am

    செய்தி முன்னோட்டம்

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழி மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலின் பேரில், அந்த அதிகாரிகள் தமிழக கடலோர காவல் படையினருக்கும், இந்திய கடற்படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இருந்தே தமிழக கடலோர எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஓர் நாட்டு படகினை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

    அந்த படகு நிற்காமல் சென்றதால் அதனை பிடிக்க அதிகாரிகள் முயன்றனர்.

    கடலோர காவல்படை விசாரணை

    கடலில் தூக்கி வீசப்பட்டது தங்கக்கட்டிகள் என தகவல்

    ஆனால் அந்த படகு நிற்காமல் சென்றதால் அதனை பிடிக்க அதிகாரிகள் முயன்றனர்.

    அப்பொழுது அந்த நாட்டுபடகில் இருந்த மூன்று பேர் மர்மமான மூட்டை ஒன்றினை கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளனர்.

    இதனையடுத்து அந்த படகை பிடித்த அதிகாரிகள் அதில் இருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

    அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் அவர்கள் கடலில் வீசியது தங்கமா அல்லது போதை பொருட்களா என்பதை கண்டறிய கடலோர காவல்படை போலீசார் கடலில் தீவிரதேடுதல் வேட்டையை நடத்திவருகிறது.

    சிலிண்டர்களை பொருத்திகொண்டு ஆழ்கடலில் மூழ்கிதேடும் நபர்களை கொண்டு தேடுதல்பணி நடத்தப்பட்டு வருகிறது.

    இதனிடையே படகிலிருந்த மூன்றுபேரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், கடலில் எரிந்தது தங்கக்கட்டிகள் என்பதையும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    கடற்படை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! கோவிட்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை உலகம்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025