NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை
    இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை

    இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை

    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் கொத்தடிமை தனத்தில் அவதிப்பட்டுள்ளார்கள்.

    இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இந்திய மாணவர்கள் அச்சம் ஏற்படும் வகையான சூழல் இருந்தால் உடனடியாக தங்களை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கான காரணம், அந்நாட்டின் வடக்கு வேல்ஸ் நகரில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் காப்பகம் ஒன்றினை நடத்தி, 50 இந்திய மாணவர்களை நவீன கொத்தடிமைத்தனத்திற்கு ஆளாக்கி தொழிலாளர்கள் என்ற பெயரில் சுரண்டலில் ஈடுபட்ட சம்பவம் தான் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் நலனுக்காக உள்ள ஜி.எல்.ஏ.ஏ. என்னும் தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான அமைப்பு சமீபத்தில் ஓர் செய்தியினை வெளியிட்டுள்ளது.

    அதில் தொழிலாளர் சுரண்டலில் ஈடுபட்ட அந்த 5பேருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    5 ஆண்டுகள் சிறை

    ஊதியத்தை சரிவர கொடுக்காமலும், ஊதிய பணத்தை பிடித்துவைத்தும் கொடுமை

    இதனைதொடர்ந்து அந்த காப்பகம் நடத்திய கேரளாவை மாத்யூ ஈசாக்(32), ஜீனுசெரியன்(30), எல்தவுஸ் சூரியச்சன்(25), எல்தவுஸ் செரியன்(25), ஜேக்கப் லிஜு(47) ஆகிய 5பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இவர்கள் நடத்திவரும் காப்பகங்களில் இந்திய மாணவர்களை வேலைக்கு சேர்த்து கொடுமைப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

    வேலைக்கு சேர்த்த பின்னர், ஊதியத்தை சரிவர கொடுக்காமலும், ஊதிய பணத்தை பிடித்துவைத்து கொள்வதுமாக 14மாதங்களாக இருந்துள்ளார்கள்.

    மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் கடும் பசியோடு, மிக சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    அங்கு மீதமடைந்த உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் துர்நாற்றம் வீசப்பட்டது என்று அரசு விசாரணை அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி 5ஆண்டுகள் வரை சிறைதண்டனை அளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    இந்தியா

    சமீபத்திய

    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்

    இந்தியா

    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை ஆந்திரா
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    இந்தியாவில் ஜிக்சர் சீரியஸை அறிமுகம் செய்த சுசுகி! ஆட்டோமொபைல்
    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025