NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர்
    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் வனிதா மோகன்

    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர்

    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கடந்த ஜனவரி மாதம் 26ம்தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம்.ரவியிடம் சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவின்கீழ் விருதுபெற்று கவுரவிக்கப்பட்டார்.

    அதன்படி அவருக்கு ஓர் சான்றிதழும், ரூ.10லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

    இந்த விருது பெற்றது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை சிறுதுளி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

    அப்போது 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சிறுதுளியின் முக்கிய குறிக்கோள் நீர்பாதுகாப்பு, காடு வளர்ப்பு, கழிவு மேலாண்மை, விவசாயம் மேம்படுதல், விழிப்புணர்வு உருவாக்கம் ஆகியன ஆகும்.

    அதன்படி தடுப்பணைகள் கட்டுதல், புதிய குளங்களை உருவாக்குதல், போன்றத்திட்டங்கள் மூலம் 17ஏரிகள், 20குளங்கள், 30ஓடைகள், 10தடுப்பணைகள் மூலம் 86 லட்ச கன மீட்டருக்கு மேல் சேமிப்பு கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    அறங்காவலர் வனிதா மோகன்

    வெகுமதி தொகையான 10 லட்சம் நீர்நிலை மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்தப்படும்

    இதனைதொடர்ந்து சிறுதுளி தற்போது புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, கரூர், கடலூர், சென்னை முதலிய இடங்களில் நீர்சேமிப்பு பணிகளை துவங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், இனிவரும் காலங்களில் நிலத்தடி நீரின் தரத்துக்காக கழிவுநீர் சுத்திகரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, தமிழக ஆளுநரிடமிருந்து பெறப்பட்ட வெகுமதி தொகையான ரூ.10லட்சத்தை வன எல்லைக்கு மிக அருகில் உள்ள நரசிபுரம் பகுதியிலுள்ள நீர்நிலை மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.

    அங்குள்ள பல தடுப்பு அணைகள் பழுதாகியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளை தூர்வாரி புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,

    இதன் மூலம் நீர்மட்டம் அதிகரித்து 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு தமிழக அரசு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இலங்கை

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025