NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய் 
    ஒரு சிறுவனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவனது தந்தையின் பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய் 

    எழுதியவர் Sindhuja SM
    May 02, 2023
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் மகனை தனியாக வளர்த்த ஒரு தாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

    ஒரு சிறுவனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவனது தந்தையின் பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மனுதாரரின் மகன், சிறு குழந்தையாக இருக்கும் போதே அவனது தந்தையால் கைவிடப்பட்டான். அதற்கு பிறகு, அவனது தாய் தான் அவனை ஒரே ஆளாக வளர்த்திருக்கிறார்.

    அந்த சிறுவனின் தாய்(மனுதாரர்) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவனது தந்தையின் பெயரை நீக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

    இதை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், இது தந்தையால் முற்றிலுமாக கைவிடப்பட்ட குழந்தையின் வழக்குகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.

    details

    தந்தையின் பெயர் இல்லாமல் பாஸ்போர்ட் மீண்டும் வழங்கப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் 

    "அத்தகைய சூழ்நிலையில், அத்தியாயம் 8இன் ஷரத்து 4.5.1 மற்றும் அத்தியாயம் 9இன் ஷரத்து 4.1 ஆகியவை தெளிவாக இந்த வழக்குக்கு பொருந்தும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று இதை விசாரித்த அமர்வு கூறியது.

    எனவே, பாஸ்போர்ட்டில் இருந்து குழந்தையின் தந்தையின் பெயரை நீக்கிவிட்டு, தந்தையின் பெயர் இல்லாமல் மைனர் குழந்தைக்கு ஆதரவாக பாஸ்போர்ட் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது போன்ற சூழ்நிலைகளில் பெற்ற தந்தையின் பெயரை நீக்கலாம் என்றும் குடும்பப்பெயரை மாற்றலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.

    "பெற்றோருக்கு இடையே திருமண தகராறு ஏற்பட்டால், இது போன்ற குழந்தையின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது," என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு  ராமநாதபுரம்
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு மேற்கு வங்காளம்
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு உச்ச நீதிமன்றம்
    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  அமித்ஷா

    டெல்லி

    டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு இந்தியா
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025