NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய் 
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய் 

    எழுதியவர் Sindhuja SM
    May 02, 2023
    10:45 am
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய் 
    ஒரு சிறுவனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவனது தந்தையின் பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் மகனை தனியாக வளர்த்த ஒரு தாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. ஒரு சிறுவனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவனது தந்தையின் பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் மகன், சிறு குழந்தையாக இருக்கும் போதே அவனது தந்தையால் கைவிடப்பட்டான். அதற்கு பிறகு, அவனது தாய் தான் அவனை ஒரே ஆளாக வளர்த்திருக்கிறார். அந்த சிறுவனின் தாய்(மனுதாரர்) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவனது தந்தையின் பெயரை நீக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இதை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், இது தந்தையால் முற்றிலுமாக கைவிடப்பட்ட குழந்தையின் வழக்குகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.

    2/2

    தந்தையின் பெயர் இல்லாமல் பாஸ்போர்ட் மீண்டும் வழங்கப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் 

    "அத்தகைய சூழ்நிலையில், அத்தியாயம் 8இன் ஷரத்து 4.5.1 மற்றும் அத்தியாயம் 9இன் ஷரத்து 4.1 ஆகியவை தெளிவாக இந்த வழக்குக்கு பொருந்தும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று இதை விசாரித்த அமர்வு கூறியது. எனவே, பாஸ்போர்ட்டில் இருந்து குழந்தையின் தந்தையின் பெயரை நீக்கிவிட்டு, தந்தையின் பெயர் இல்லாமல் மைனர் குழந்தைக்கு ஆதரவாக பாஸ்போர்ட் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது போன்ற சூழ்நிலைகளில் பெற்ற தந்தையின் பெயரை நீக்கலாம் என்றும் குடும்பப்பெயரை மாற்றலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. "பெற்றோருக்கு இடையே திருமண தகராறு ஏற்பட்டால், இது போன்ற குழந்தையின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது," என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி

    இந்தியா

    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு மு.க ஸ்டாலின்
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  அமெரிக்கா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  ஜம்மு காஷ்மீர்
    தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு தமிழ்நாடு

    டெல்லி

    டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு இந்தியா
    இரவில் பொறுப்பில்லாமல் காரை ஓட்டிய டிரைவர்.. டெல்லியில் பரபரப்பு! இந்தியா
    மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ்  இந்தியா
    ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023