NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி

    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி

    எழுதியவர் Arul Jothe
    May 30, 2023
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டின் பிரபல பாடகி சின்மயி முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தார்.

    சின்மயி & 17 பெண்கள் சேர்ந்து பதிந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பாடகி சின்மயி ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார் .

    "பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும்போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்" என்று முதலமைச்சரை குறிப்பிட்டு கூறியிருந்தார்.

    மேலும் "போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் பாலியல் குற்றச்சாட்டு குறைந்தபாடிலை என்றும் உங்கள் நண்பர் & ஆதரவாளரான கவிஞர் வைரமுத்து மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தும், உங்கள் அருகாமையில் அவர் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Singer Chinmayi

    சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி

    "தமிழ் திரைத்துறையில் 5 ஆண்டுகள் வேலை செய்ய தடையுடன் 2018-19-ம் ஆண்டிலே சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன்".

    "அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று இப்போது வரை தெரியவில்லை. இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் கூட எதிர்கொள்ள பலம் உள்ளது".

    "அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத ஒருவருக்கு நியாயம் கிடைக்க இத்தனை நாட்கள் ஆகும்தான் போல" என்று அந்த பதிவில் கூறினார்.

    அதோடு, திரைத்துறையில் போக்சோ, ஐசிசி அமைப்புகள் சரியாக செயல்பட ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

    அவரது ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    .@mkstalin Respected Honble CM, Sir,

    It is amazing you show support to the cause of justice to sexual harassment survivors every time a case comes to notice across India. When political leaders speak there is hope for change.

    However there are no systems in place yet - No ICC…

    — Chinmayi Sripaada (@Chinmayi) May 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    முதல் அமைச்சர்
    ஸ்டாலின்
    கனிமொழி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கோலிவுட்

    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி காதலித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? தமிழ் நடிகை
    சாந்தனு நடிக்கும் 'ராவண கோட்டம்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை! திரைப்பட வெளியீடு
    கமல்ஹாசனின் மகள்களை கடத்த திட்டமா? மகாநதி படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம் கமல்ஹாசன்
    'ராவண கோட்டம்' திரைப்பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தரப்பு  திரைப்பட அறிவிப்பு

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு

    ஸ்டாலின்

    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? மோடி
    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    பள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி தமிழ்நாடு

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025