
ஒசாமா பின்லேடனை மறந்துவிட்டீர்களா? அமெரிக்காவிற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வார்னிங்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அளித்த மதிய விருந்தை காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக விளாசியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் கடந்த காலத்தை, குறிப்பாக ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததில் அதன் பங்கை அமெரிக்கர்கள் மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
அபோட்டாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாமுக்கு அருகில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாதுகாப்பாக வாழ்ந்து வந்ததை சசி தரூர் நினைவு கூர்ந்தார்.
9/11 தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவரை பாகிஸ்தான் பாதுகாப்பாக மறைந்து வைத்ததை அமெரிக்கா எப்படி இவ்வளவு விரைவாக மறந்துவிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
எச்சரிக்கை
பாகிஸ்தானிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்
ட்ரம்ப்-முனீர் சந்திப்பு தொடர்பாக இந்தியாவில் சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானை நம்புவது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்காவை சசி தரூர் வலியுறுத்தினார்.
ஏனெனில் அது பயங்கரவாதிகளுக்கு நிதியளித்து இந்தியாவிற்குள் அனுப்பியதாக அவர் குற்றம் சாட்டினார்.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதற்கு எதிராக ஒரு வலுவான செய்தியை தெரிவிக்க டிரம்ப் இந்த சந்திப்பைப் பயன்படுத்தி இருப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே, கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து டிரம்புடன் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு வெள்ளை மாளிகையின் அழைப்பை நிராகரித்த பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா நிராகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதியிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.