Page Loader
பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்?
ந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை?

பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2024
05:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அணித் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜே.டி(யு) கட்சியின் நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. 30 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க, இவ்விரண்டு கட்சிகளும் முக்கியமானதாக இருக்கும். தேர்தலுக்கு முன்னதாகவே சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரும், NDA கூட்டணியில் இணைந்த நிலையில், தற்போது சரத் பவார் அவர்கள் இருவரையும் இந்தியா கூட்டணியின் பக்கம் இழுக்க பேசிவருகிறார். இந்த சூழலில், பாஜக தனிபெரும்பான்மை(272) பெறாததால், ஜே.பி.நட்டா வீட்டில் கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பாஜக தற்போது 234 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கிடையில் NDA 291 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post