NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை
    மூளை நரம்பில் ரத்த அடைப்புகள் - செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை

    மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை

    எழுதியவர் Nivetha P
    Nov 20, 2023
    03:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்பின்னர் அவர் கடந்த ஜூலை 17ம்.,தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    அவருக்கான நீதிமன்றக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும்நிலையில், அவரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனிடையே கடந்த 15ம்.,தேதி சிறையில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    சிறைத்துறை மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி, அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு, இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் அவரது உடல்நிலை சீராக இல்லை என்பதால் உடனடியாக அவர் அன்றிரவே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச்செல்லப்பட்டார்.

    சிகிச்சை 

    செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை 

    அங்கு அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அவரது கால் மரத்து போகும் பிரச்சனை இருந்து வந்த நிலையில், அவருக்கு சி.டி. ஸ்கேனுடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேனும் எடுக்கப்பட்டது.

    அதன் முடிவில் அவரது மூளைக்கு செல்லும் நரம்புகளில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அவருக்கு வயிற்றுப்புண், குடல்புண் உள்ளிட்டவைகளும் இருப்பதால் 6வது.,நாளான இன்றும் அவரை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிசோதித்துள்ளனர்.

    நரம்பியல், இதயவியல் துறை மருத்துவர்களும் சிகிச்சையளித்து வருகிறார்கள்.

    தற்போது இதுகுறித்து மருத்துவர்கள், "செந்தில் பாலாஜி மூளை நரம்பிலுள்ள ரத்த அடைப்புகளை கரைக்க மருந்துகள் வழங்கப்படுகிறது" என்றும்,

    "கழுத்து பின்புறமுள்ள சவ்வில் பாதிப்புள்ளது. அதுவே அவரது கடும் தலைவலி காரணம். இதற்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது" என்றும் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    அறுவை சிகிச்சை
    மருத்துவமனை
    கைது

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட் சென்னை உயர் நீதிமன்றம்
    செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்  அமலாக்க இயக்குநரகம்
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  கைது
    செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை வருமான வரித்துறை

    அறுவை சிகிச்சை

    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை
    உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தமிழ்நாடு
    கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை மருத்துவமனை

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி திருவண்ணாமலை

    கைது

    கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநிலத்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு தமிழ்நாடு
    ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா ஆந்திரா
    சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது போராட்டம்
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி திருமணங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025