NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டம் பேசுவோம்: ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்தியாவில் தண்டனை இல்லையா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டம் பேசுவோம்: ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்தியாவில் தண்டனை இல்லையா?
    2018ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 377 உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

    சட்டம் பேசுவோம்: ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்தியாவில் தண்டனை இல்லையா?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 24, 2023
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

    ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து இந்திய சட்டங்கள் என்ன கூறுகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

    அதற்கு முதலில் IPCயின் சட்டப்பிரிவு 377ஐ பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

    1860ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம்(IPC) மிக முக்கிய குற்றவியல் சட்டமாகும்.

    IPCயின் சட்டப்பிரிவு 377, இயற்கைக்கு மாறான உடலுறவு குறித்து பேசுகிறது.

    CKN

     சட்டப்பிரிவு 377 என்ன கூறுகிறது?

    "எந்த ஒரு ஆண், பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையின் ஒழுங்குக்கு எதிராக உடலுறவு கொள்பவருக்கு ஆயுள் தண்டனை/ பத்தாண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்." என்று சட்டப்பிரிவு 377 கூறுகிறது.

    "இயற்கையின் ஒழுங்குக்கு எதிராக" என்று இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டிருப்பது பல ஆண்டுகளாக பால்புதுமையினர் சமூகத்திற்கு(LGBTQ+) எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தது.

    எனவே, 2018ஆம் ஆண்டு, பாலியல் சிறுபான்மையினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்தது.

    அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்றம், வயது வந்த இருவர்(பாலின பேதம் கிடையாது) "சம்மதத்துடன்" உடலுறவு கொள்வது குற்றமற்றது என்று தீர்ப்பு வழங்கியது.

    ந்கயூபிஜின்

    சட்டப்பிரிவு 377 மொத்தமாக ரத்து செய்யப்படவில்லை

    எனினும், விலங்குகள் மற்றும் குழந்தைகளுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தொடர்பான சட்டப்பிரிவு 377யின் அம்சங்கள் IPCயில் இருந்து நீக்கப்படாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

    ஆகவே, 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பிறகும் சட்டப்பிரிவு 377யின் சில அம்சங்கள் பயன்பாட்டில் தான் இருந்தது.

    அதன்படி, "ஒப்புதல் இல்லாமல்" ஒரு ஆண் அல்லது பெண்ணுடன் யார் உடலுறவு வைத்துக்கொண்டாலும் அது தவறு தான். தற்போதுள்ள சட்டத்தின்படி அதற்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும்.

    டிவ்ஜன்

    நாடாளுமமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் மசோதாக்கள்

    ஆனால், சம்பீத்தில் இந்தியாவில் புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களவையில் 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.

    1860ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்திற்கு(IPC) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா(BNS) என்ற சட்டத்தை இயற்ற ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இது இந்திய அரசு எடுத்திருக்கும் மிக பெரும் முடிவாகும்.

    ஆனால், பிரச்சனை என்னவென்றால் இந்த புதிய மசோதாவில் சட்டப்பிரிவு 377 மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.

    கிழ்மவெண்ட்ஜ்

    ஒரு ஆணுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்த தண்டனையும் இல்லை

    பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் குற்றிப்பிடப்பட்டிருக்கும் BNS 2023 மசோதாவின் 5வது அத்தியாயத்தின் படி, "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்" என்று மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களில் "ஆண்" என்ற வார்த்தை எங்குமே குறிப்பிடப்படவில்லை. "பெண்கள்" மற்றும் "குழந்தைகள்" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒரு ஆணுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்த தண்டனையையும் முன்மொழியப்படவில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

    அதனால், இந்த புதிய மசோதா பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட/பாதிக்கப்படும் ஆண்களுக்கு அநீதி இழைக்கக்கூடும் என்றும் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    இந்தியா

    1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்  கனடா
    வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா! டென்னிஸ்
    கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை கனடா
    இந்தியாவில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025