NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

    எழுதியவர் Nivetha P
    Feb 23, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக'வில் ஒற்றை தலைமை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இருஅணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் வலுத்து வருகிறது.

    இதனையடுத்து கடந்த ஜூலை 11ம்தேதி எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டப்பட்டது.

    அதில் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதன்படி, ஓபிஎஸ் தரப்பினர்களும் ஓபிஎஸ்'யும் கட்சியை விட்டு நீக்கினர்.

    இதற்கு எதிர்ப்புதெரிவித்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.

    இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு இதுகுறித்து மேல்முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று(பிப்.,23)உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ்மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    ஓபிஎஸ் நீக்கப்பட்டதுடன் செல்லுபடியாகும்

    பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் - நீதிபதிகள்

    இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பினை இன்று நீதிபதிகள் அளித்துள்ளார்கள்.

    தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கூறுகையில், கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு குறித்து விசாரித்தோம்.

    எதிர்தரப்பினரது கருத்துக்களும் கேட்கப்பட்டது என்று கூறினர். அதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பினை வழங்கினர்.

    பின்னர், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

    அதே போல் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும், ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரை கட்சியை விட்டு நீக்கியதும் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    உச்ச நீதிமன்றம்
    எடப்பாடி கே பழனிசாமி
    ஓ.பன்னீர் செல்வம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    அதிமுக

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி எடப்பாடி கே பழனிசாமி
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எடப்பாடி கே பழனிசாமி

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு

    ஓ.பன்னீர் செல்வம்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025