NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு 
    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த அதிமுக ஆட்சியில் 2011ம்ஆண்டு முதல் 2015ம்ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார்.

    அப்போது போக்குவரத்து காவல்துறையில் பணி வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் திருப்பி கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்வதாகவும் கூறப்பட்டது.

    இதனை ஏற்ற நீதிமன்றம் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தர்மராஜ், ஒய் பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    அமைச்சர் 

    சிறப்பு விசாரணை குழு அமைப்பு 

    இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவினை ரத்து செய்து, தொடக்கத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால் வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பானது மனுத்தாக்கல் செய்தது.

    அதேபோல் சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை இன்று(மே.,16) நீதிபதிகள் அமர்வு சிபிசிஐடி-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை முடித்து வைத்தனர்.

    பின்னர் அமலாக்கத்துறையின் மனுவினை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் விசாரணை குழு அமைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போக்குவரத்து காவல்துறை
    அதிமுக
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை

    அதிமுக

    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எடப்பாடி கே பழனிசாமி
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    அதிமுக வழக்கு: 4வது நாள் விசாரணையின் சுருக்கம் இந்தியா
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றம்

    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  மத்திய அரசு
    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  இந்தியா
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி  தமிழ்நாடு
    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025