NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
    இந்தியா

    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    February 10, 2023 | 01:14 pm 0 நிமிட வாசிப்பு
    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
    உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள்

    உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மத்திய அரசு இன்று(பிப் 10) மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்துள்ளது. ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதிகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரப்பட்டுள்ளன. இனி, உச்ச நீதிமன்றம் அதன் முழு பலத்துடன் இயங்கும். தற்போது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர். "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் பின்வரும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார்." என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்வீட் செய்துள்ளார்.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்ற 5 நீதிபதிகள்

    இவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனவரி 31ஆம் தேதி பரிந்துரைத்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, உச்ச நீதிமன்ற பதவி உயர்வுக்கு ஐந்து பெயர்களை பரிந்துரைத்தது. ஆனால், நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே நீடித்த நியமனங்களினால் ஏற்பட்ட மோதலுக்கு இடையே, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவை மத்திய அரசால் பூர்த்தி செய்யப்பட்டன. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இந்த வார தொடக்கத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    திரௌபதி முர்மு

    இந்தியா

    தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஒரே நாளில் அதிரடி சரிவு தங்கம் வெள்ளி விலை
    Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்! ஓலா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசம்
    சத்தமில்லாமல் கூகுள் பே, போன்பே-விற்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள்; முழு விபரம்! தொழில்நுட்பம்

    உச்ச நீதிமன்றம்

    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் இந்தியா
    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு சென்னை
    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இந்தியா
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்ற உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    திரௌபதி முர்மு

    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023