NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
    உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள்

    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2023
    01:14 pm

    செய்தி முன்னோட்டம்

    உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மத்திய அரசு இன்று(பிப் 10) மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்துள்ளது.

    ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதிகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரப்பட்டுள்ளன. இனி, உச்ச நீதிமன்றம் அதன் முழு பலத்துடன் இயங்கும்.

    தற்போது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.

    "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் பின்வரும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார்." என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்வீட் செய்துள்ளார்.

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்ற 5 நீதிபதிகள்

    இவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனவரி 31ஆம் தேதி பரிந்துரைத்தது.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, உச்ச நீதிமன்ற பதவி உயர்வுக்கு ஐந்து பெயர்களை பரிந்துரைத்தது.

    ஆனால், நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே நீடித்த நியமனங்களினால் ஏற்பட்ட மோதலுக்கு இடையே, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவை மத்திய அரசால் பூர்த்தி செய்யப்பட்டன.

    ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இந்த வார தொடக்கத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இந்தியா

    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை உலகம்
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா சீனா

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025