NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு
    5 நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முறைப்படி இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்

    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 06, 2023
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியோடு சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆகும்.

    ஆனால் தற்போது 27நீதிபதிகள் கொண்டே நீதிமன்றம் இயங்குகிறது, இதனால் ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது.

    கடந்த டிசம்பர் 13ம்தேதி 5நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நீதிபதி சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    பின்னர் ஜனவரி 31ம்தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிந்தால் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் கூறியது.

    இந்நிலையில் கடந்த 2மாதங்களாக கொலீஜியம் பரிந்துரைக்கும் நபர்களை நியமிக்காமல் மத்தியஅரசு காலதாமதம் செய்துவருகிறது.

    இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கையில், இன்னும் 2நாட்களில் நியமனம் தொடர்பான உத்தரவு வெளியாகும் என்று பதிலளித்துள்ளார்.

    மீதமுள்ள 2 காலியிடங்கள்

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 5 புதிய நீதிபதிகளுக்கு முறையாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்

    மேலும் கொலீஜியம் பரிந்துரையை செயல்முறை படுத்தாமல் மத்திய அரசு காலதாமதம் செய்வது மிகதவறு.

    இதன் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளார்கள்.

    இதனையடுத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பங்கஜ்மிதல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பி.வி.சஞ்சய்குமார், பாட்னா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ்மிஸ்ரா ஆகியோர் நியமனத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த சனிக்கிழமை(பிப்.,4) கையெழுத்திட்டு ஒப்புதலளித்தார்.

    அதன்படி, 5 நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முறைப்படி இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

    இதன்படி தற்போது நீதிபதிகள் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ள நிலையில், மீதம் 2காலியிடங்கள் கொலிஜியம் பரிந்துரைத்த அலகாபாத், குஜராத்தை சேர்ந்த நீதிபதிகள் கொண்டு நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025