NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து
    இந்தியா

    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து

    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து
    எழுதியவர் Sindhuja SM
    Mar 21, 2023, 06:16 pm 0 நிமிட வாசிப்பு
    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து
    7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 20 ஆண்டுகள் சிறைதண்டனையாக மாற்றம்

    கடலூரை சேர்ந்த 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 20 ஆண்டுகள் சிறைதண்டனையாக உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. கடலூர் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தை சேர்ந்த சிறுவனின் பெயர் சுரேஷ்(7). கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது சுரேஷை சுந்தர்ராஜன் என்பவர் கடத்தினார். அதன் பின், 5 லட்சம் ரூபாய் கேட்டு சுரேஷின் பெற்றோரை சுந்தர்ராஜன் மிரட்டி இருக்கிறார். அவர் கேட்ட பணம் கிடைக்கவில்லை என்றதும் சிறுவன் சுரேஷை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், சுந்தர்ராஜனை கைது செய்தனர். சுந்தர்ராஜனுக்கு தூக்கு தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    2018ல் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது

    இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. 2013ஆம் ஆண்டு, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அப்போது விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட உத்தரவை மீண்டும் உறுதி செய்தது. ஆனால், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 2018ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அப்போது விசாரித்த பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதை இன்று விசாரித்த டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, குற்றவாளி சுந்தர்ராஜனுக்கான தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    அம்ரித்பால் சிங் தப்பி செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ பஞ்சாப்
    கடந்த காலத்தை கண்முன் நிறுத்தும் AI கலைஞர் - அசத்தல் ஃபோட்டோஸ் செயற்கை நுண்ணறிவு
    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம் பஞ்சாப்

    உச்ச நீதிமன்றம்

    மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு டெல்லி
    ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் இந்தியா
    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு இந்தியா
    சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023