NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து
    7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 20 ஆண்டுகள் சிறைதண்டனையாக மாற்றம்

    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து

    எழுதியவர் Sindhuja SM
    Mar 21, 2023
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூரை சேர்ந்த 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 20 ஆண்டுகள் சிறைதண்டனையாக உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.

    கடலூர் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தை சேர்ந்த சிறுவனின் பெயர் சுரேஷ்(7). கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது சுரேஷை சுந்தர்ராஜன் என்பவர் கடத்தினார்.

    அதன் பின், 5 லட்சம் ரூபாய் கேட்டு சுரேஷின் பெற்றோரை சுந்தர்ராஜன் மிரட்டி இருக்கிறார். அவர் கேட்ட பணம் கிடைக்கவில்லை என்றதும் சிறுவன் சுரேஷை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டார்.

    இந்த வழக்கை விசாரித்த போலீசார், சுந்தர்ராஜனை கைது செய்தனர்.

    சுந்தர்ராஜனுக்கு தூக்கு தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்தியா

    2018ல் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது

    இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

    2013ஆம் ஆண்டு, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அப்போது விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட உத்தரவை மீண்டும் உறுதி செய்தது.

    ஆனால், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 2018ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை அப்போது விசாரித்த பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

    இதற்கான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதை இன்று விசாரித்த டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, குற்றவாளி சுந்தர்ராஜனுக்கான தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்

    இந்தியா

    மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் - கட்டண விபரம் என்ன தெரியுமா? மெட்டா
    கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார் கேரளா
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இஸ்ரோ
    தொடர்ந்து மூடப்படும் வங்கிகள்! இந்திய வங்கிக்கும் பிரச்சினையா? கவர்னர் பளிச் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025