NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம்
    இந்தியா

    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம்

    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 23, 2023, 12:12 pm 1 நிமிட வாசிப்பு
    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம்
    இந்த புதுவித சத்துமாவுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட இருக்கிறது.

    தமிழகத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ஒரே ஒரு வகையான சத்துமாவு மட்டுமே மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அதை மாற்றி, இனி 3 வகையான சத்துமாவுகளை தமிழக அரசு வழங்க இருக்கிறது. இந்த புதுவித சத்துமாவுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட இருக்கிறது. கடந்த வருடம், அங்கன்வாடிகளில் இருக்கும் 38 லட்சம் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு நடப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தமிழகத்தில் உள்ள 9.3 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, 3 விதமான சத்துமாவு பாக்கெட்டுகள் அங்கன்வாடிகளில் வழங்கப்பட இருக்கிறது.

    மூன்று விதமான சத்துமாவின் விவரங்கள்

    வெள்ளை நிற பாக்கெட்டுகள்- 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கானது. இந்த சத்துமாவு BIS தர சான்றிதழ் பெற்ற மாவாக இருக்கும். இது 2 கிலோ பாக்கெட்டாக வழங்கப்படும். இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டுகள்- 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கானது. இது 'வெண்ணிலா', 'சாக்லேட்', 'ஸ்டாபெர்ரி' போன்ற பிளேவர்களில் 500 கிராம் பாக்கெட்டுகளாக வழங்கப்படும். நீல நிற பாக்கெட்டுகள்- கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மாவில் இனிப்பின் சதவீதம் குறைக்கப்பட்டு புரத சத்துகளின் சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கும். மேலும், இது 500 கிராம் பாக்கெட்டுகளாக வழங்கப்படும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    தமிழ்நாடு

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஈரோடு
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு சென்னை உயர் நீதிமன்றம்
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா

    தமிழக அரசு

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு அறநிலையத்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ திண்டுக்கல்
    அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு தமிழ்நாடு
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் சென்னை உயர் நீதிமன்றம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023