NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
    கல்லூரியில் சனாதனம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

    'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

    எழுதியவர் Nivetha P
    Sep 16, 2023
    05:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட சுற்றறிக்கையினை திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் வெளியிட்டதற்கு எதிரான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சேஷாயி விசாரித்து வந்தார்.

    அதன்படி இன்று(செப்.,16) இதன் விசாரணையினை முடித்து வைத்த அவர், சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை, இந்துக்களின் நித்திய கடமைகள், பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு ஆகும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்த கடமைகள் அனைத்தும் அழிக்கத்தக்கவையா? என்றும், நாட்டுக்கு சேவை செய்வது கடமை இல்லையா? குடிமகன் தனது நாட்டினை நேசிக்க கூடாதா? என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

    சனாதனம் 

    தீண்டாமையை சகித்து கொள்ள இயலாது - நீதிபதி 

    இதனை தொடர்ந்து அவர், "சாதியவாதத்தையும் தீண்டாமையையும் சனாதனம் ஊக்குவிப்பதாக ஓர் கருத்து உள்ளது. அனைத்து குடிமகன்களும் சமமானவர்களே. அதே போல் இந்நாட்டில் தீண்டாமையினை சகித்து கொள்ளவும் முடியாது" என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர், மதம் சார்ந்த பழக்க வழக்கங்கங்களில் சில மோசமான நடைமுறைகள் செயல்பாட்டில் இருந்தாலும் அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்கான பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    கருத்து சுதந்திரம் என்று கூறி மற்ற ஒருவரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    சென்னை

    மெட்ராஸ் டே 2023: நடைப்பயணம் முதல் உணவு திருவிழா வரை, இந்த சிறப்பு தினத்தை கொண்டாட சில வழிகள் மெட்ராஸ் டே
    சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள் மெட்ராஸ் டே
    மெட்ராஸ் டே 2023: இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகராக விளங்கும் சென்னை! மெட்ராஸ் டே
    384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை தமிழ்நாடு

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025