NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
    'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

    எழுதியவர் Nivetha P
    Sep 16, 2023
    05:06 pm
    'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
    கல்லூரியில் சனாதனம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

    சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட சுற்றறிக்கையினை திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் வெளியிட்டதற்கு எதிரான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சேஷாயி விசாரித்து வந்தார். அதன்படி இன்று(செப்.,16) இதன் விசாரணையினை முடித்து வைத்த அவர், சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை, இந்துக்களின் நித்திய கடமைகள், பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு ஆகும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த கடமைகள் அனைத்தும் அழிக்கத்தக்கவையா? என்றும், நாட்டுக்கு சேவை செய்வது கடமை இல்லையா? குடிமகன் தனது நாட்டினை நேசிக்க கூடாதா? என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

    2/2

    தீண்டாமையை சகித்து கொள்ள இயலாது - நீதிபதி 

    இதனை தொடர்ந்து அவர், "சாதியவாதத்தையும் தீண்டாமையையும் சனாதனம் ஊக்குவிப்பதாக ஓர் கருத்து உள்ளது. அனைத்து குடிமகன்களும் சமமானவர்களே. அதே போல் இந்நாட்டில் தீண்டாமையினை சகித்து கொள்ளவும் முடியாது" என்று கூறியுள்ளார். மேலும் அவர், மதம் சார்ந்த பழக்க வழக்கங்கங்களில் சில மோசமான நடைமுறைகள் செயல்பாட்டில் இருந்தாலும் அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்கான பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். கருத்து சுதந்திரம் என்று கூறி மற்ற ஒருவரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    உயர்நீதிமன்றம்

    சென்னை

    சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை கோவை
    சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ்
    நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை  சீமான்
    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம் ஏஆர் ரஹ்மான்

    உயர்நீதிமன்றம்

    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல் செந்தில் பாலாஜி
    சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு  சின்னத்திரை
    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023