NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தான் பயின்ற பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்தார் சாலமன் பாப்பையா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தான் பயின்ற பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்தார் சாலமன் பாப்பையா 
    இதற்கு மதுரை மக்களவை எம்பி சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    தான் பயின்ற பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்தார் சாலமன் பாப்பையா 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2023
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    தான் பயின்ற மதுரை அரசு பள்ளிக்கு பேராசிரியரும், பேசுச்சாளருமான சாலமன் பாப்பையா ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார்.

    1941இல் இருந்து 1945 வரை, மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அருகே உள்ள வெள்ளிவீதியார் மாநகர பள்ளியில் சாலமன் பாப்பையா ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார்.

    இந்த பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்டு மகளிர் மேல்நிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

    இந்நிலையில், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்திற்கு கீழ், தான் பயின்ற அரசு பள்ளியில் வகுப்பறை கட்டும் பணிக்காக ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

    வியூவ்

    'சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும்':  எம்பி சு. வெங்கடேசன்

    இந்த நிதியை அவர் நேரடியாக மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரிடம் வழங்கியுள்ளார்.

    இதற்கு மதுரை மக்களவை எம்பியும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் எம்பி சு. வெங்கடேசன், "தனக்குப் பயன்தந்து இன்பமூட்டிய கல்வியை வழங்கிய வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி இன்னும் பல்லாண்டுகள் நீடித்துநின்று பலருக்கும் கல்விப் பயனை நல்க வேண்டும் என்று விழைந்து அப்பள்ளிக்கு 20 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ள தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும்" என்று தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    எம்பி சு. வெங்கடேசனின் ட்விட்டர் பதிவு 

    தனக்குப் பயன்தந்து இன்பமூட்டிய கல்வியை வழங்கிய வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி இன்னும் பல்லாண்டுகள் நீடித்துநின்று பலருக்கும் கல்விப் பயனை நல்க வேண்டும் என்று விழைந்து அப்பள்ளிக்கு 20 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ள தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும் pic.twitter.com/jnvBs23VLT

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) July 13, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    தமிழக அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மதுரை

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து கோவை
    160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி தமிழ்நாடு
    மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல் ரயில்கள்
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம் மத்திய அரசு

    தமிழக அரசு

    தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு  சுகாதாரத் துறை
    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  ஊட்டி
    ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025