NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி 
    சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி 
    இந்தியா

    சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி 

    எழுதியவர் Nivetha P
    June 02, 2023 | 01:49 pm 0 நிமிட வாசிப்பு
    சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி 
    சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி

    சேலம் மாவட்டம் மஜ்ராகொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியினை சேர்ந்தவர் சதீஷ்குமார்(41). இவர் வேறு ஒருவர் பெயரில் சர்க்கார்கொல்லப்பட்டி விவசாய தோட்டப்பகுதியில் பட்டாசுஆலை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பணிபுரிந்து வந்துள்ளார்கள். இதனிடையே நேற்று(ஜூன்.,1)உரிமையாளர் சதீஷ்குமார் உள்பட 9 பேர் பட்டாசினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசு ஆலை வெடித்து சிதறியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து ஆம்புலன்சும், இரும்பாலை காவல்துறையும் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது படுகாயமடைந்து ஆங்காங்கே கிடந்த 6 பேரினை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உரிமையாளர் சதீஷ்(41),நடேசன்(50)மற்றும் பானுமதி(40) ஆகிய 3பேர் வெடிவிபத்தில் உடல் சிதறி இறந்துக்கிடந்தனர்.

    தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக அறிவிப்பு 

    ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் இறந்த பெண்ணின் தலையினை காணவில்லை என்றும் கூறப்பட்டது. பின்னர் 3 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, கமிஷனர்கள் கவுதம் கோயல், லாவண்யா, உதவி கலெக்டர் மாறன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக கொடுத்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சேலம்
    அரசு மருத்துவமனை
    மு.க ஸ்டாலின்

    சேலம்

    சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர்  தமிழ்நாடு
    சேலம் ஆவின் பால் பண்ணை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ்  தமிழ்நாடு
    அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்!  இந்தியா
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    அரசு மருத்துவமனை

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி சென்னை
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்  தமிழ்நாடு
    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்!  இந்தியா

    மு.க ஸ்டாலின்

    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  இளையராஜா
    கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று முதல் துவக்கம்  கருணாநிதி
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023