NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு
    சபரிமலை ஐயப்பன் கோயில்

    வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு

    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022
    03:17 pm

    செய்தி முன்னோட்டம்

    சபரிமலையில், அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.

    41 நாட்கள் நடக்கும் இந்த மண்டல பூஜை நவம்பர் 17ம் தேதி துவங்கியது.

    இந்த 41 நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி, சபரிமலையில் தற்போது மண்டல பூஜை முடிந்த நிலையில், அடுத்து மகர விளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

    இந்த பூஜையின் பொழுது தடையின்றி மின்சாரம் கிடைக்க மின் விநியோகம் செய்யும் வழித்தடங்களில் பழுது பார்த்தல், சேதமான கருவிகள் ஆகியவற்றை மாற்றுதல் போன்ற பணிகளில் நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஜனவரி 20ம் தேதி வரை கோயில் நடை திறந்தே இருக்கும் என அறிவிப்பு

    ஜனவரி 14ம் தேதி நடக்கும் மகர ஜோதி காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு

    இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறவுள்ளது என்றும், இன்று (30.12.2022) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை திறக்கப்படும் கோயில் நடை வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெறவுள்ள மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்தை தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி வரை கோயில் நடை திறந்தே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மகர விளக்கு பூஜை அன்று பொன்னம்பலம்மேட்டில் தெரியும் மகர ஜோதியை காண வழக்கம் போல் இந்தாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, தரிசனம் காணவரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மாநிலங்கள்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    இந்தியா

    இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி டிரெண்டிங்
    உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை வைரல் செய்தி
    மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தமிழ்நாடு
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் கடன்

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025