NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன்
    குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர் கீதா ஜீவன்

    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன்

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2022
    10:44 pm

    செய்தி முன்னோட்டம்

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

    இதில் கலந்துகொண்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் 75 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

    தமிழகத்தில் இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்தினை உணவில் அளிக்க ஆலோசனை நடத்தி, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    45 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை, செவித்திறன் குறைபாடு போன்றவைகள் இருக்கும் பட்சத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    திட்டவட்டமாக மறுக்கும் அமைச்சர்

    புரிதல் இல்லாமல் அவதூறு பரப்பி பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க.வினர்

    மேலும் ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு சத்தான இனிப்பு வகை ஒன்றினை வழங்கும் புது திட்டமும் நடைமுறை படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் கூறியது, அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க., பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள்.

    1996ம் ஆண்டில் இருந்தே முட்டைகளை தண்ணீரில் போட்டு, அழுகிய முட்டைகளை தனியே எடுத்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

    அந்த வகையில் திருப்பி அனுப்ப வைக்கப்பட்டிருந்த முட்டைகளை போட்டோ எடுத்து பா.ஜ.க.,வினர் தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இது குறித்த புரிதல் இல்லை.

    தமிழகத்தில் உள்ள எந்த அங்கன்வாடிகளுக்கும் அழுகிய முட்டைகள் வழங்ப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025