NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை
    மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகை தொகை பாக்கி வைத்திருப்பதால் மைதானத்திற்கு சீல்

    சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 09, 2024
    01:48 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் அமைந்துள்ள பிரபல கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால் தமிழக அரசு சீல் வைத்துள்ளது.

    இன்று காலை மைதானத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    மைதானத்திற்கு குத்தகை பாக்கியாக ₹780 கோடி ரூபாய் உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் கிண்டி ரேஸ் கோர்ஸ், 1946 ஆம் ஆண்டில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒப்பந்தகாலம் 2045 ஆம் ஆண்டில் முடிவடைகிறது.

    எனினும் இதுவரை, குத்தகை மாறிய நிலுவை தொகையை செலுத்தவில்லை.

    எனவே வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இச்சீல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    வழக்கு

    நிலுவை தொகை செலுத்த கோரி வழக்கு 

    160 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், 80 ஏக்கரில் தான் குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வந்தன.

    எஞ்சிய பகுதிகளில் திருமண மண்டபங்கள், நீச்சல் குளங்கள், சொகுசு விடுதிகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் குதிரை பந்தயம் நடைபெறும் இடத்திற்கான குத்தகை பாக்கியை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதன் விசாரணையின் இறுதியில் கிண்டி ரேஸ் கோர்ஸிற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து கிண்டி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் ஆகிய தாசில்தார்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரில் வருகை புரிந்து மைதானத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | ₹780 கோடி வாடகை பாக்கியை செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்!#SunNews | #GuindyRaceCourse pic.twitter.com/i0RnY7MbKj

    — Sun News (@sunnewstamil) September 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வருவாய்த்துறை
    தமிழக அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு தமிழக அரசு
    இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார் பாதுகாப்பு துறை
    போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல் போக்குவரத்து

    வருவாய்த்துறை

    அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி தமிழக அரசு
    ஊட்டியின் பிரபலமான 52.4 ஏக்கர் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் ஊட்டி

    தமிழக அரசு

    உயர்கல்வி படிக்கும் சிறுவர்களுக்கான மாதாந்திர உதவித் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர்
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங் தமிழக முதல்வர்
    பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளிக்கல்வித்துறை
    விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்த தமிழக அரசு ஓய்வூதியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025