NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS
    இறையன்பு விடுத்த கோரிக்கையை தமிழக அரசு கருத்தில் கொண்டு, சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க உத்தரவு அளித்துள்ளது

    தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 03, 2023
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற வாரம் வெளியான தமிழக அரசின் ஆணைப்படி, இனி மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில், தங்கவருபவர்களின் வாகன ஓட்டிகளுக்கு, வாகனம் நிறுத்தும் இடத்துக்கு ஏற்ப, தனி படுக்கையறைகள் மற்றும் ஓய்வறைகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் 28 (புதன்கிழமை) அன்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்ட உத்தரவில், விடுதி வளாகத்திலோ அல்லது ஹோட்டலில் இருந்து 250 மீட்டர் தூரத்திலோ டிரைவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட வேண்டும்.

    இதற்கான கட்டணத்தை, மலிவு விலையில் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தங்கும் அறையில், படுக்கை வசதியும், குளியலறையும் இருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு தமிழ்நாட்டில் பலராலும் வரவேற்கப்பட்டது. எனினும் இந்த உத்தரவிற்கு காரணம் யார் தெரியுமா?

    card 2

    முன்னாள் அரசு செயலர் இறையன்பு IAS

    சென்ற வாரம் ஓய்வு பெற்ற அரசு செயலர் இறையன்பு IAS தான் இந்த உத்தரவிற்கு காரணம் எனக்கூறுகிறார்கள்.

    அவர் சமூகம் சார்ந்த பல அதிரடி முடிவுகள் எடுப்பார் என்று பரவலான பேச்சு உண்டு. உதாரணமாக புத்தக திருவிழா, பசுமை மயானம் அவரின் யோசனையே.

    அதன் தொடர்ச்சியாக, வீடு வசதித்துறை செயலர் அபூர்வாவுக்கு, வாகன ஓட்டிகளின் சார்பாக ஒரு கடிதம் எழுதி இருந்தாராம் இறையன்பு.

    அதில், "சுற்றுலாவுக்காக வெளியூர் செல்வோர், ஹோட்டலில் அறை எடுத்து தங்குகின்றனர். ஆனால், ஓட்டுனர்களோ, வாகனங்களில் தங்கும் நிலைமையே உள்ளது. இதனால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு, விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. அதனால், அனைத்து ஹோட்டல்ளிலும், டிரைவர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் " என குறிப்பிட்டு இருந்தாராம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு தமிழகம்
    இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது  தமிழ்நாடு செய்தி
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  டெங்கு காய்ச்சல்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் போதைப்பொருள்

    தமிழக அரசு

    தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை  பட்ஜெட் 2023
    அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு  தமிழ்நாடு
    தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு தமிழ்நாடு
    கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025