NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!
    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி

    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 20, 2023
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களிடம் திருப்பியளிக்கும் '100 Days 100 Pays' என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    பத்து வருடங்களுக்கு மேல் செயல்பாட்டில் இல்லாத வங்கிக்கணக்கில் இருக்கும் டெபாசிட்களும், டெர்ம் டெபாசிட் திட்டங்களில் முதிர்வடைந்த தேதியில் இருந்து 10 வருடங்களில் கோரப்படாத டெபாசிட்களும் உரிமை கோரப்படாத பணமாகக் கருதப்படும்.

    இப்படி தங்கள் வங்கியில் இருக்கும் உரிமை கோரப்படாத பணத்தை ரிசர்வ் வங்கியின் Depositer Education and Awareness Fund-ல் பிற வங்கிகள் செலுத்திவிடும். இதுவே இதுவரை நடைமுறையாக இருந்து வந்தது.

    ஆனால், தற்போது உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களைக் கண்டறிந்து ஒப்படைக்க 100 Days 100 Pays திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ரிசர்வ் வங்கி

    100 Days 100 Pays: 

    இந்தப் புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு வங்கியும் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 உரிமை கோரப்படாத கணக்குகளின் பணத்தை 100 நாட்களுக்குள் உரிய நபரைக் கண்டறிந்து ஒப்படைக்க வேண்டும்.

    இந்தப் புதிய திட்டத்தின் மூலம் உரிமை கோரப்படாத பணத்தின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும் என நம்புகிறது ரிசர்வ் வங்கி.

    இந்த புதிய திட்டத்தை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் துவங்க வேண்டும் என நாட்டின் பிற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

    ரிசர்வ் வங்கியின் தகவல்களின் படி கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை மட்டும் இந்தியா முழுவதும் ரூ.35,012 கோடி உரிமை கோரப்படாத தொகை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஷேக் சதியா அல்மாசா புதிய சாதனை! இந்திய அணி
    ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி!  பாலிவுட்
    பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023 பிரான்ஸ்
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025