NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!
    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!
    இந்தியா

    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 20, 2023 | 06:06 pm 1 நிமிட வாசிப்பு
    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!
    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி

    வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களிடம் திருப்பியளிக்கும் '100 Days 100 Pays' என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. பத்து வருடங்களுக்கு மேல் செயல்பாட்டில் இல்லாத வங்கிக்கணக்கில் இருக்கும் டெபாசிட்களும், டெர்ம் டெபாசிட் திட்டங்களில் முதிர்வடைந்த தேதியில் இருந்து 10 வருடங்களில் கோரப்படாத டெபாசிட்களும் உரிமை கோரப்படாத பணமாகக் கருதப்படும். இப்படி தங்கள் வங்கியில் இருக்கும் உரிமை கோரப்படாத பணத்தை ரிசர்வ் வங்கியின் Depositer Education and Awareness Fund-ல் பிற வங்கிகள் செலுத்திவிடும். இதுவே இதுவரை நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், தற்போது உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களைக் கண்டறிந்து ஒப்படைக்க 100 Days 100 Pays திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    100 Days 100 Pays: 

    இந்தப் புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு வங்கியும் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 உரிமை கோரப்படாத கணக்குகளின் பணத்தை 100 நாட்களுக்குள் உரிய நபரைக் கண்டறிந்து ஒப்படைக்க வேண்டும். இந்தப் புதிய திட்டத்தின் மூலம் உரிமை கோரப்படாத பணத்தின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும் என நம்புகிறது ரிசர்வ் வங்கி. இந்த புதிய திட்டத்தை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் துவங்க வேண்டும் என நாட்டின் பிற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் தகவல்களின் படி கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை மட்டும் இந்தியா முழுவதும் ரூ.35,012 கோடி உரிமை கோரப்படாத தொகை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    ரிசர்வ் வங்கி

    டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம் தமிழ்நாடு
    'ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை' - ரிசர்வ் வங்கி! இந்தியா
    2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! இந்தியா
    ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கி - பரபரப்பு தகவல்  பிரதமர் மோடி

    இந்தியா

    இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா? எலக்ட்ரிக் கார்
    தியேட்டரில் தென்னிந்திய உணவுகள்.. PVR-ன் புதிய முயற்சி! திரையரங்குகள்
    மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்? கேம்ஸ்
    இந்தியாவில் உள்ளவர்கள் கிரீன் கார்டைப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதமாகிறது !  அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023