NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தவறான விளம்பர வழக்கில் பொது மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தவறான விளம்பர வழக்கில் பொது மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்

    தவறான விளம்பர வழக்கில் பொது மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 16, 2024
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான அவமதிப்பு வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    அந்த வழக்கு தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர் பால்கிருஷ்ணா ஆகியோர் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

    பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும். தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    அந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனர்களை நீதிமன்றம் கடுமையாக சாடியது.

    ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் கோரிய மன்னிப்பையும் ஏற்க கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    பதஞ்சலி 

    எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன் என்று ராம்தேவ் பதில் 

    ஹரித்வாரை தளமாகக் கொண்ட பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக செயல்படாததற்காக உத்தரகாண்ட் அரசாங்கத்தையும்உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.

    இன்று காலை, நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி ஏ அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, "யோகாவிற்கு நீங்கள் செய்ததை நாங்கள் மதிக்கிறோம்," என்று ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோரிடம் கூறியது.

    இந்நிலையில், பொது மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ராம்தேவ், உச்ச நீதிமன்றத்தின் மாண்பைக் குலைப்பது தனது நோக்கமல்ல என்றார்.

    ராம்தேவிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆயுர்வேதத்தின் நன்மைகளை வலியுறுத்த மற்ற மருத்துவ முறைகளை அவர்கள் ஏன் அவமதித்தார்கள் என்று கேட்டது.

    அதற்கு எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன் என்று ராம்தேவ் பதிலளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பதஞ்சலி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பதஞ்சலி

    தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்  பாபா ராம் தேவ்
    பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் உச்ச நீதிமன்றம்
    பதஞ்சலி ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025