NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு 
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.200 என்று விற்கப்படுவதாக தெரிகிறது.

    இதனை கேட்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

    இஞ்சி மட்டுமில்லை பீன்ஸ், எலுமிச்சம் பழம் உள்ளிட்டவைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    சென்னையில் இயங்கி வரும் மொத்த விலை காய்கறி அங்காடிகளை கொண்ட கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் வந்து இறங்குகிறது.

    இந்நிலையில் தற்போதுள்ள கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும், காய்கறிகளின் வரத்து குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளது.

    சந்தை 

    கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதுமானவிலை கிடைக்காததால் சாகுபடி நிறுத்தம் 

    மேற்கூறப்பட்ட காரணங்களால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து ஒரு கிலோ பீன்ஸ், எலுமிச்சைப்பழங்கள் அனைத்தும் கிலோவுக்கு ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.300க்கும்,எலுமிச்சைப்பழங்கள் ரூ.170க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு-மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒருவார காலமாகவே இஞ்சி ஒரு கிலோ ரூ.200க்கும்,பீன்ஸ் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

    இதுதொடர்பாக இஞ்சி வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதுமானவிலை கிடைக்காததால் இஞ்சி சாகுபடியினை பல விவசாயிகள் நிறுத்திவிட்டார்கள்.

    அதனால் தான் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    சென்னை

    ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  மு.க ஸ்டாலின்
    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு  பாஜக
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  காவல்துறை
    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - முக்கிய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்  பாஜக

    தமிழ்நாடு

    மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்  திருவிழா
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  என்ஐஏ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025