NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் 
    சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்

    சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    Jul 06, 2023
    11:26 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநில தலைநகர் சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம் பகுதியில் எழிலகம் என்னும் பொதுப்பணித்துறை வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த வளாகத்தில் நீர்வளத்துறை போன்ற பல துறை சார்ந்த அலுவலக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, நீர்வளத்துறை கீழ் செயல்பட்டு வரும் கடல் அரிப்பை தடுக்கும் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன்.

    இவர் ஒப்பந்ததாரரின் பதிவுகள், லைசன்ஸ்களை புதுப்பித்து கொடுக்க லஞ்சம் வாங்கியதாக புகார்கள் அவர்மீது எழுந்துள்ளது.

    இந்த புகார்கள் அடிப்படையில், சென்னை எழிலகத்தில் உள்ள பாஸ்கரனின் அலுவலகத்தில் நேற்று(ஜூலை.,6) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    சோதனை 

    வேறு சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் 

    இந்த சோதனையானது நள்ளிரவு 2 மணிவரை தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது.

    இந்த சோதனையின் போது அதிகாரிகள் பாஸ்கரனின் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 540 ரூபாயினை பறிமுதல் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    அந்த பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் உதவி செயற்பொறியாளரான பாஸ்கரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அழைத்து சென்றுள்ளனர்.

    டி.எஸ்.பி. தமிழ்மணி தலைமையில் எழிலகத்தில் நடந்த இந்த சோதனையினை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த சோதனையின் போது வேறு சில முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தமிழ்நாடு
    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்
    ஸ்குவாஷ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி உலக கோப்பை
    சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் பெய்த கனமழை - மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் விளக்கம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு  பள்ளிக்கல்வித்துறை
    மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள்  தமிழக அரசு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு தமிழகம்
    கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை - தமிழக அரசு திட்டம்  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025