NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு
    தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு

    தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு

    எழுதியவர் Nivetha P
    May 02, 2023
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கேழ்வரகு உற்பத்தியினை பெருக்கி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ஊட்டி அருகேயுள்ள பாலகொலா மலை கிராமத்தில் நாளை(மே.,3)முதல் இந்த விநியோகம் துவங்கும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவர், கேழ்வரகு வழங்கும் திட்டத்திற்காக 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு மத்திய உணவு கழகத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

    அதில் நீலகிரிக்கு ஒரு மாதத்திற்கு 400 மெட்ரிக்டன் கேழ்வரகு தேவைப்படும்.

    ஆனால் தற்போது 482 மெட்ரிக் டன் கேழ்வரகு இருப்புள்ளது என்று தெரிவித்தார்.

    கேழ்வரகு

    சிறுதானிய ஆண்டு என அறிவிப்பு - விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 

    மேலும் பேசிய அவர், தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு கேழ்வரகு இருப்பு இல்லாத காரணத்தினால் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முதலில் இந்த விநியோகம் துவங்கப்படுகிறது.

    பின்னர் படிப்படியாக இந்த விநியோகமானது விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

    உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த தற்போது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவு துறை மூலம் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதனுடன் வேளாண்துறையுடன் இணைந்து சிறுதானியம் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    தமிழ்நாடு

    அடுத்த சில மணி நேரத்தில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  போக்குவரத்து விதிகள்
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு செய்தி
    சில தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    தமிழக அரசு

    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ திண்டுக்கல்
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு அறநிலையத்துறை
    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம் தமிழ்நாடு
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025