NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி
    அடுத்த செய்திக் கட்டுரை
    முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி
    பிபிசி ஆவணப்படம் பற்றி இங்கிலாந்து எம்பி பாப் பிளாக்மேன் பேட்டி அளித்துள்ளார்.

    முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 17, 2023
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    பிபிசி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரித்துறை 'ஆய்வு' நேற்று(பிப் 16) இரவு முடிவடைந்தது.

    இந்த ஆய்வின் போது வருமான வரித்துறையினர் ஆவணங்களை சார்பார்த்ததாகவும் கணினிகளில் இருந்த தரவுகளை அவர்கள் நகல் எடுத்து வைத்துக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டரில் இந்த செய்தியை உறுதிப்படுத்திய பிபிசி, அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்போம் என்று தெரிவித்திருக்கிறது.

    மேலும், பயமோ பாகுபாடோ இல்லாமல் தொடர்ந்து செய்திகளை வழங்குவோம் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதால் இது பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்தியா

    பிபிசி ஆவணப்படம் பற்றி பேசிய இங்கிலாந்து எம்பி

    பிபிசி ஆவணப்படம் பற்றி பேசிய இங்கிலாந்து எம்பி பாப் பிளாக்மேன், இப்படி ஒரு ஆவணப்படம் வெளிவந்திருக்கவே கூடாது என்று கூறியுள்ளார்.

    "இது பிபிசியால் ஒளிபரப்பப்பட்டிருக்கவே கூடாது. ஏனெனில் பிபிசிக்கு உலகளவில் நற்பெயர் இருக்கிறது. பிபிசி வெளியிட்டதால் இது உண்மையாக தான் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இது பிபிசி மேற்பார்வையில் இன்னொரு அமைப்பால் தயாரிக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது உண்மையல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குஜராத் கலவரத்திற்கான காரணங்களை இது விரிவாக ஆராயவில்லை. நரேந்திர மோடிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரித்தது என்பதையும் அப்போது அதற்கு சாதகமான எந்த ஆதாரமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதும் அதில் குறிப்பிடப்படவில்லை" என்று அவர் விமசித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இங்கிலாந்து

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் ஏர்டெல்
    மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR பாஜக
    காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர் டெல்லி
    இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம் தமிழ்நாடு

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025