NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'
    இந்தியா

    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'

    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'
    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023, 01:30 pm 0 நிமிட வாசிப்பு
    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'
    10 மூத்த பிபிசி ஊழியர்கள், வருமான வரித் துறை "ஆய்வு" தொடங்கியதிலிருந்து வீட்டிற்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 10 பிபிசி ஊழியர்கள், வருமான வரித் துறை "ஆய்வு" தொடங்கியதிலிருந்து வீட்டிற்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித் தகவல்களைப் பற்றி ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள பிபிசி, வழக்கம் போல் தங்கள் செய்திகளை ஒளிபரப்புவதாகவும், பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

    45 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் சோதனை

    டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை(பிப் 14) காலை 11:30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை தற்போது 45 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பண பரிவர்த்தனைகள், நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செய்தி நிறுவனத்தைப் பற்றிய பிற விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியின் ஒரு பகுதியாக மின்னணு சாதனங்களிலிருந்து தரவை நகலெடுக்கின்றனர் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மெத்தைகளை வைத்து பிபிசி அலுவலக்திற்குள்ளேயே தூங்குவதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்களாம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    மும்பை
    டெல்லி

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    மும்பை

    கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள் பாலிவுட்
    ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம் பாலிவுட்
    ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணித்த பாலிவுட் நடிகர்கள்; போலீஸ் கேஸ் பாயுமா? பாலிவுட்
    மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC! மத்திய அரசு

    டெல்லி

    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்
    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023