NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI
    இதுவரை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI

    எழுதியவர் Sindhuja SM
    Jul 29, 2023
    03:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் பெண்களின் வீடியோ வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) இன்று(ஜூலை 29) முறைப்படி ஏற்றுக்கொண்டு, FIR பதிவு செய்துள்ளது.

    மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பெரும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ இதற்கு எதிராக FIR பதிவு செய்துள்ளது.

    இதுவரை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீடியோ எடுக்கப்பட்ட மொபைல் போனும் மீட்கப்பட்டுள்ளது.

    சஜிக்

     பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சகிப்புத்தண்மை இருக்கக்கூடாது

    இனி, சிபிஐ குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து, குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) ஏற்கும் என்று உள்துறை அமைச்சகம், கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சகிப்புத்தண்மை இருக்கக்கூடாது என்றும், விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரி இருந்தது.

    மணிப்பூர் அரசின் ஆலோசனைக்குப் பிறகே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்தது என்பது உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    சிபிஐ

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    மணிப்பூர்

    மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் மத்திய அரசு
    "இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம் ராகுல் காந்தி
    கிழித்தெறியப்பட்ட ராஜினாமா கடிதம்! முடிவை வாபஸ் பெற்ற மணிப்பூர் முதல்வர் கலவரம்
    மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025