NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் தனியார் நிறுவன பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் தனியார் நிறுவன பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு
    தமிழகத்தில் தனியார் நிறுவன பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

    தமிழகத்தில் தனியார் நிறுவன பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 20, 2023
    02:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் ஆவின் நிறுவன பாலோடு ஒப்பிட்டு பார்க்கையில் தனியார் நிறுவன பால் விலை ரூ.20 வரை அதிகமாக உள்ளது.

    இதனால் ஆவின் பாலுக்கு கடைகளில் தேவை அதிகமாக உள்ளது.

    எனினும் தனியார் நிறுவனங்கள் கடந்த ஆண்டு பாலின் விலையினை 4 முறை உயர்த்தியது.

    இதனையடுத்து தற்போது இந்தாண்டு துவக்கத்திலேயே தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையினை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

    நேற்றே ஒரு நிறுவனம் இதுகுறித்து அறிவித்த நிலையில், இன்று முதல் 4 தனியார் பால் நிறுவனங்களின் விலையுயர்வு அமலுக்கு வருகிறது.

    இது குறித்த சுற்றறிக்கையினை பால் முகவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.

    அமைச்சருக்கு கடிதம்

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம்

    அந்த அறிக்கையில் பால் கொள்முதல் விலை, உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விலையுயர்வின் படி, பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயருகிறது என்று கூறியுள்ளதோடு, தயிரின் விலையும் லிட்டருக்கு ரூ.2 உயர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேலும் இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கு சங்கம் சார்பில் ஓர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    அதில், 'தனியார் நிறுவனங்கள் பால் விலையினை தன்னிச்சையாக உயர்த்துவதை தடுக்க வேண்டும்' என்றும், 'பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசு நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தமிழ்நாடு

    தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தஞ்சை பெரிய கோவில்
    2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை! இந்தியா
    "தமிழக ஆளுநருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்": சுப்ரமணியன் சுவாமி இந்தியா
    போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி! தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025